மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே 2வது டெஸ்ட் போட்டி நடந்து வருகின்றது.
நியூசிலாந்து அணி தனது இரண்டாவது தொடரில் 13 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்து தடுமாறிக் கொண்டிருந்தது. அப்போது ஸ்பைடர் கேமரா மைதானத்திற்கு கீழே இறங்கியது.
அந்த ஸ்பைடர் கேமராவை மேலே இழுக்க நிறைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் கேமராவை மேலே இழுக்க முடியவில்லை.
சிறிது நேரத்திற்கு கேமரா மைதானத்தில் அப்படியே நின்றுவிட்டது. அப்பொழுது பவுலிங் செய்து கொண்டிருந்தேன் இந்திய கிரிக்கெட் வீரர்கள் கேமரா விட மனது சேட்டைகளை செய்ய ஆரம்பித்தனர்.
பந்து வீசிக்கொண்டிருந்த அஸ்வின் கேமரா மேலே ஏற உதவி செய்தார். சூரியகுமார் யாதவ் வந்து கேமரா முன்பு செய்கைகள் செய்து காட்டினார்.
பின்னர், கேப்டன் விராட் கோலி அங்குவந்து கேமராவை பார்த்து கை காட்டுகிறார்.
அவர்கள் கேமரா முன்பு சேட்டைகள் செய்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில் கிரிக்கெட் ரசிகர்களுக்கு சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கேமரா விளையாடுவதற்கு இடைஞ்சலாக இருந்ததால் கேமரா நடுவில் இருந்த நேரத்தில் தேநீர் இடைவெளி கொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.