அகண்டா பட வெற்றி.. திருப்பதியில் தரிசனம் செய்த பாலகிருஷ்ணா!

Published:

balakrishna - 2026

தெலுங்கில் வெளியான அகண்டா திரைப்பட வெற்றியை தொடர்ந்து ஏழுமலையானை வழிபட்டார் நடிகர் பாலகிருஷ்ணா

நடிகர் பாலகிருஷ்ணா இன்று காலை திருப்பதி கோவிலில் ஏழுமலையானை விஐபி தரிசனத்தில் வழிபட்டார். அவர் கதாநாயகனாக நடித்த அகண்டா திரைப்படம் ஆந்திராவில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் இரவு திருப்பதி மலைக்கு வந்த அவர் திருமலையில் இரவு தங்கி காலை விஐபி பிரேக் தரிசனத்தில் ஏழுமலையானை வழிபட்டார்.

சாமி தரிசனத்திற்கு பின் அவருக்கு தேவஸ்தானம் சார்பில் வேத ஆசி, பிரசாதங்கள் மற்றும் நினைவு பரிசுகள் ஆகியவை வழங்கப்பட்டன.

தொடர்ந்து கோவிலுக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய பாலகிருஷ்ணா கடந்த 2ஆம் தேதி தெலுங்கில் வெளியான அகண்டா திரைப்படம் வெற்றி பெற்றதை முன்னிட்டு இயக்குனர் போயபாட்டி சீனுவுடன் ஏழுமலையானை தரிசனம் செய்தேன் என்று கூறினார்.

மறைந்த ஆந்திர முதல்வர் என்டி ராமராவ் மகனான பாலகிருஷ்ணா தெலுங்கு தேசம் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார்.

ALSO READ:  கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

Related articles

Recent articles

spot_img