December 6, 2025, 4:51 AM
24.9 C
Chennai

நெப்டியூனின் வளிமண்டலத்தின் வெப்பநிலையில் மாற்றம்! விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்!

Neptune - 2025

நெப்டியூன் கிரகம் சூரியக்குடும்பத்தின் எட்டாவது மற்றும் மிகத் தொலைவில் உள்ள ஒரு கோளாகும்.

சூரியனிடமிருந்து 8 ஆவது இடத்தில் 4,49,82,52,900 கி.மீ அல்லது 30.07 AU தூரத்தில் அமைந்துள்ளது.

சூரிய குடும்பத்தை ஆய்வு செய்து வரும் விஞ்ஞானிகள் நெப்டியூன் பற்றிய சில அதிர்ச்சி தகவல்களை சேகரித்துள்ளனர். நெப்டியூனின் வளிமண்டலத்தின் வெப்பநிலை எதிர்பாராத விதமாக மாறுகிறது என்று ப்ளானெட்டரி சயின்ஸ் இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு கூறுகிறது.

உலகம் முழுவதும் உள்ள பல தொலைநோக்கிகளின் உதவியுடன், நெப்டியூன் வெப்பநிலையில் ஏற்படும் இந்த மாற்றத்தை விஞ்ஞானிகள் தெளிவாகப் படம்பிடிக்க முடிந்தது. எதிர்பார்த்ததற்கு மாறாக, இந்த கிரகத்தின் சராசரி வெப்பநிலை குறைந்து வருவதை அவர்கள் கண்டறிந்துள்ளனர்.

ஆய்வின் முதன்மை ஆசிரியரும் லெய்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் முதுகலை ஆராய்ச்சி கூட்டாளருமான டாக்டர் மைக்கேல் ரோமன், ‘இந்த மாற்றம் எதிர்பார்க்கப்படவில்லை.

தெற்கு கோடை காலத்தின் தொடக்கத்தில் இருந்து இதை நாங்கள் கவனித்து வருவதால், படிப்படியாக இங்கு வெப்பம் அதிகரிக்கும் என்றே நாங்கள் எதிர்பார்த்தோம் என்றார்.

இந்த மாற்றத்திற்கான சரியான காரணம் இன்னும் அறியப்படவில்லை. இருப்பினும், வெப்பநிலை மாறுபாடுகள் நெப்டியூனின் வளிமண்டல வேதியியலில் பருவகால மாற்றங்களுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

இது தவிர, 11 வருட சூரிய சுழற்சியும் இதற்கு காரணமாக இருக்கலாம் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

கடந்த இரண்டு தசாப்தங்களாக நெப்டியூனின் வளிமண்டலம் எவ்வாறு மாறுகிறது என்பதை இந்த ஆய்வு விவரிக்கிறது. “எங்கள் தரவு நெப்டியூன் பருவத்தின் பாதிக்கும் குறைவான காலத்திற்கானது,

எனவே இவ்வளவு பெரிய மற்றும் விரைவான மாற்றங்களை நாங்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை” என்று ஆய்வு இணை ஆசிரியரும் நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகத்தின் மூத்த ஆராய்ச்சி விஞ்ஞானியுமான டாக்டர் க்ளென் ஆர்டன் கூறினார்.

நெப்டியூன் நம்மில் பலருக்கு மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது, ஏனென்றால் அதைப் பற்றி நாம் இன்னும் நம்மைடம் குறைவான தகவல்களே உள்ளன. நெப்டியூன் சூரிய குடும்பத்தில் மிக தொலைவில் உள்ள கிரகம்.

நெப்டியூனின் மிக உயர்ந்த மேகங்கள் மிக வேகமாக உருவாகின்றன, கிரகத்தின் தோற்றம் வியத்தகு முறையில் மாறக்கூடும். இது சராசரியாக 30,600 மைல்கள் (49,250 கிமீ) விட்டம் கொண்டது. இது பூமியை விட நான்கு மடங்கு அகலமாக உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories