February 23, 2026, 2:40 AM
25.9 C
Chennai

குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தினத்தில்… ஸ்டாலின் சொன்ன ‘ஆவின்’ பொய்!

bjp annamalai - 2026
#image_title

சர்வதேச குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினமான இன்று தமிழகத்தில் ஆவின் நிறுவனத்தில் நடைபெற்ற குழந்தை தொழிலாளர் பிரச்சினையை மழுப்பி மூடி மறைத்து முதல்வர் ஸ்டாலின் பொய் சொல்லி இருக்கிறார் என்று சமூக வலைதளங்களில் வீடியோ பதிவுகளுடன் செய்திகள் உலா வருகின்றன. பாஜக மாநில தலைவர் கே அண்ணாமலை தனது சமூக தள பக்கத்தில் அவற்றில் ஒரு வீடியோவை பதிவு செய்து கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் இன்று சர்வதேச குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தினம் என்று குறிப்பிட்டு குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு குறித்த சில தகவல்களையும் பதிவு செய்துள்ளார். . அவை..

புத்தகங்களையும், விளையாட்டு பொருட்களையும் கைகளில் ஏந்த வேண்டிய வயதில், குழந்தைகள் வறுமையின் பிடியில் சிக்கி, பல்வேறு தொழிற்கூடங்களில் பணியமர்த்தப்படுகின்றனர். உலகளாவிய அளவில், குழந்தைத் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்துவதை எதிர்த்தும், குழந்தைத் தொழிலாளர்களை மீட்டு அவர்களுக்கான மறுவாழ்வை அமைத்துக் கொடுப்பதையும் நோக்கமாகக் கொண்டு, குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தினம் கொண்டாடப்படுகிறது.

குழந்தைத் தொழிலாளர்களை மீட்டெடுக்கும் நோக்கில் மத்திய அரசு முனைப்புடன் செயல்படுவதோடு, குழந்தைத் தொழிலாளர்கள் பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறது. அதோடு மட்டுமின்றி, தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டம் (NCLP) அமைத்து, தொண்டு நிறுவனங்கள் மூலம் பல குழந்தைகளுக்கு கல்வி, உணவு, உதவித் தொகை வழங்கி அவர்களின் வாழ்வு மேம்பட அயராது செயல்பட்டு வருகிறது. மத்திய அரசின் இந்த சீரியமுயற்சியால் தற்போது NCLP திட்டத்தின் கீழ் சுமார் 6000 சிறப்புப் பள்ளிகள் இயங்கி வருவதோடு 10 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் கல்வி கற்று பயனடைந்து வருகின்றனர்.

ஆனால் தமிழகத்திலோ, குழந்தைத் தொழிலாளர்களை மீட்டெடுக்க வேண்டிய தமிழக அரசே ஆவின் நிறுவனத்தில் சிறுவர்களை பணிக்கு அமர்த்துவது வேதனைக்குரிய ஒன்று. தமிழகத்தில் குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை காட்டிலும் 180% அதிகரித்துள்ளதாக ஒரு ஆய்வறிக்கை கூறுகிறது. கொரோனா தொற்றுக் காலத்தில், குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்ததாக ஆய்வறிக்கை கூறும் நிலையில், தமிழகத்தில் குழந்தைத் தொழிலாளர்களே இல்லை என்று கூறும் அமைச்சர் திரு. சி பி. கணேசன் அவர்களது பேட்டி அர்த்தமற்றது.

ஒரு நாட்டின் எதிர்காலம் அங்கு பிறந்து வளர்கின்ற குழந்தைகளின் கைகளில் உள்ளது. ஒரு மனிதனுக்கு குழந்தைப் பருவம் மிகவும் முக்கியமான ஒன்று. அவன் நல்ல வழிகளில் சென்று சிறப்படைவதும், தீயவழிகளில் சென்று இழிவடைவதும், அந்த குழந்தைப் பருவமே தீர்மானிக்கும். அத்தகைய சிறப்பான குழந்தைப் பருவத்தை, குழந்தைத் தொழிலாளர் என்று அடைத்து அடிமையாக்காமல். அவர்கள் வாழ்வு மேம்பட அயராது பாடுபடுவோம். இந்தியாவின் எதிர்காலத்தைப் பாதுகாப்போம்.

அண்ணாமலை தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து உள்ள வீடியோ பதிவு….

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் பிப்.23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

Entertainment News

Popular Categories