குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தினத்தில்… ஸ்டாலின் சொன்ன ‘ஆவின்’ பொய்!

bjp annamalai - 2026
#image_title

சர்வதேச குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினமான இன்று தமிழகத்தில் ஆவின் நிறுவனத்தில் நடைபெற்ற குழந்தை தொழிலாளர் பிரச்சினையை மழுப்பி மூடி மறைத்து முதல்வர் ஸ்டாலின் பொய் சொல்லி இருக்கிறார் என்று சமூக வலைதளங்களில் வீடியோ பதிவுகளுடன் செய்திகள் உலா வருகின்றன. பாஜக மாநில தலைவர் கே அண்ணாமலை தனது சமூக தள பக்கத்தில் அவற்றில் ஒரு வீடியோவை பதிவு செய்து கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் இன்று சர்வதேச குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தினம் என்று குறிப்பிட்டு குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு குறித்த சில தகவல்களையும் பதிவு செய்துள்ளார். . அவை..

புத்தகங்களையும், விளையாட்டு பொருட்களையும் கைகளில் ஏந்த வேண்டிய வயதில், குழந்தைகள் வறுமையின் பிடியில் சிக்கி, பல்வேறு தொழிற்கூடங்களில் பணியமர்த்தப்படுகின்றனர். உலகளாவிய அளவில், குழந்தைத் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்துவதை எதிர்த்தும், குழந்தைத் தொழிலாளர்களை மீட்டு அவர்களுக்கான மறுவாழ்வை அமைத்துக் கொடுப்பதையும் நோக்கமாகக் கொண்டு, குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தினம் கொண்டாடப்படுகிறது.

குழந்தைத் தொழிலாளர்களை மீட்டெடுக்கும் நோக்கில் மத்திய அரசு முனைப்புடன் செயல்படுவதோடு, குழந்தைத் தொழிலாளர்கள் பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறது. அதோடு மட்டுமின்றி, தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டம் (NCLP) அமைத்து, தொண்டு நிறுவனங்கள் மூலம் பல குழந்தைகளுக்கு கல்வி, உணவு, உதவித் தொகை வழங்கி அவர்களின் வாழ்வு மேம்பட அயராது செயல்பட்டு வருகிறது. மத்திய அரசின் இந்த சீரியமுயற்சியால் தற்போது NCLP திட்டத்தின் கீழ் சுமார் 6000 சிறப்புப் பள்ளிகள் இயங்கி வருவதோடு 10 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் கல்வி கற்று பயனடைந்து வருகின்றனர்.

ஆனால் தமிழகத்திலோ, குழந்தைத் தொழிலாளர்களை மீட்டெடுக்க வேண்டிய தமிழக அரசே ஆவின் நிறுவனத்தில் சிறுவர்களை பணிக்கு அமர்த்துவது வேதனைக்குரிய ஒன்று. தமிழகத்தில் குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை காட்டிலும் 180% அதிகரித்துள்ளதாக ஒரு ஆய்வறிக்கை கூறுகிறது. கொரோனா தொற்றுக் காலத்தில், குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்ததாக ஆய்வறிக்கை கூறும் நிலையில், தமிழகத்தில் குழந்தைத் தொழிலாளர்களே இல்லை என்று கூறும் அமைச்சர் திரு. சி பி. கணேசன் அவர்களது பேட்டி அர்த்தமற்றது.

ஒரு நாட்டின் எதிர்காலம் அங்கு பிறந்து வளர்கின்ற குழந்தைகளின் கைகளில் உள்ளது. ஒரு மனிதனுக்கு குழந்தைப் பருவம் மிகவும் முக்கியமான ஒன்று. அவன் நல்ல வழிகளில் சென்று சிறப்படைவதும், தீயவழிகளில் சென்று இழிவடைவதும், அந்த குழந்தைப் பருவமே தீர்மானிக்கும். அத்தகைய சிறப்பான குழந்தைப் பருவத்தை, குழந்தைத் தொழிலாளர் என்று அடைத்து அடிமையாக்காமல். அவர்கள் வாழ்வு மேம்பட அயராது பாடுபடுவோம். இந்தியாவின் எதிர்காலத்தைப் பாதுகாப்போம்.

அண்ணாமலை தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து உள்ள வீடியோ பதிவு….

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories