December 6, 2025, 6:31 AM
23.8 C
Chennai

ப.சிதம்பரம், நளினி சிதம்பரத்தின் சீனியர் பதவிகளை விலக்க வேண்டும்: உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு கடிதம்!

P Chidambaram and Nalini Chidambaram - 2025

நிதி முறைகேடுகள், ஊழல் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கும் முன்னாள் மத்திய ‘நிதி’ அமைச்சர் ப.சிதம்பரம், அவரது மனைவி நளினி சிதம்பரம் ஆகியோரின் சீனியர் பதவிகளை நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு கடிதம் எழுதியிருக்கிறார் தீ பயோனியர் பத்திரிகையின் மூத்த பத்திரிகையாளரான ஜே கோபி கிருஷ்ணன் என்பவர்!

இவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் க்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் ப.சிதம்பரம், நளினி சிதம்பரம் ஆகியோரின் சீனியர் பதவிகளை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார்

நளினி சிதம்பரம், ப.சிதம்பரம் இருவருமே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள். வருமானவரித்துறை அமலாக்கத்துறை சிபிஐ ஆகியவற்றினால், நிதி முறைகேடுகள் தொடர்பான வழக்குகளில் சிக்கிக் கொண்டு கருப்பு பணம் பண மோசடி ஊழல் ஆகியவற்றின் அவர்களுக்கான தொடர்புகள் குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது

ஆனால் அவர்கள் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் நீதிமன்றத்தின் மூலமே தப்பித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ள கோபிகிருஷ்ணன், இரண்டு பக்க கடிதத்தை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எழுதியுள்ளார்

அந்தக் கடிதத்தில் கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி ஆகிய மூத்த வழக்கறிஞர்கள் சிதம்பரத்துக்கும் நளினிக்காகவும் பல்வேறு வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆஜராகி அரசியல் பின்னணியுடன் வாதாடினார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். இது சீனியர் அட்வகேட் – மூத்த வழக்கறிஞர் என்ற பதவியை தவறாக பயன்படுத்துவதாகும் என்று குறிப்பிட்டுள்ளார்

பண மோசடி தடுப்பு விதியின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் இவ்வாறு மூத்த வழக்கறிஞர் பதவியை வகித்து தப்பித்துக் கொண்டு இருப்பது நாட்டுக்கு கேடு என்று குறிப்பிட்டுள்ள கோபி கிருஷ்ணன் அவர்கள் இருவரையும் மூத்த வழக்கறிஞர் என்ற நிலையில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார்.

gopikrishnan letter to cji - 2025

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories