நீதிமன்றத்தை அவமதித்து.. பொன்.மாணிக்கவேலுக்கு இடம் ஒதுக்காமல்… எந்த வசதியும் செய்து தராத தமிழக அரசு!

pon manickavel - 2026

சென்னை: நீதிமன்றம் உத்தரவிட்டும் எந்த வசதியையும் தமிழக அரசு பொன்.மாணிக்கவேலுக்கு செய்து தரவில்லை!

சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேலுக்கு தேவையான வசதிகளைச் செய்து கொடுக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அவருக்கு எந்த வசதியும் செய்து கொடுக்காமல் இழுத்தடித்து வருகிறது தமிழக அரசு.

முன்னாள் ஐ.ஜி.யான அவர், தனது கார் நிறுத்தப் படும் இடத்திலேயே இருந்து கொண்டு, தனது பணிகளை கவனித்து வந்தார். நீதிமன்றத்தால் அமர்த்தப் பட்ட அதிகாரிக்கு தமிழக அரசு செய்த மிக மோசமான பழிவாங்கும் செயலாக அது பார்க்கப் பட்டது. கார் ஷெட்டில் அமர்ந்து அவர் வேலை செய்தது ஊடகங்களில் வெளியானது. இந்நிலையில், உயர்நீதிமன்றத்தில் புகார் தெரிவித்துள்ளார் பொ்ன்.மாணிக்கவேல்.

இதை அடுத்து சிலைக்கடத்தல் தடுப்பு வழக்குகளில் பிறப்பிக்கும் உத்தரவுகளை நிறைவேற்றாமல், தடுப்பது எது? என்று அரசு, காவல்துறைக்கு நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

மேலும், குற்றத்தின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதை கண்டறியவே பொறுமையாக இருக்கிறோம் என்று கூறியது நீதிமன்றம்.

ALSO READ:  மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்..

சிலைக்கடத்தல் தடுப்பு வழக்கில் ஆவணங்கள் ஒப்படைக்கவில்லை என்றும், டிஎஸ்பி பன்னீர்செல்வம் ஆவணங்களை தரவில்லை; தனக்கு ஒதுக்கப்பட்ட வசதிகளில் 1% மட்டுமே செய்து தரப்பட்டது என்றும் பொன்.மாணிக்கவேல் புகார் கூறினார்.

இதை அடுத்து, நீதிமன்ற உத்தரவுகளை தொடர்ந்து அவமதிப்பது நீதிமன்ற அவமதிப்பாகாதா? என்று அரசு, காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. மேலும், உயர் நீதிமன்றம் அளிக்கும் உத்தரவுகள் நிறைவேற்றப்பட வேண்டும் எனக் கூறிய நீதிபதிகள் தமிழக அரசை கண்டித்தனர்.

குற்றத்தின் பின்னணியில் யார் யார் உள்ளனர் என்பது கண்டறியப்பட வேண்டும் எனக் கூறிய நீதிபதிகள், சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேலின் புகாருக்கு ஜன-24 ஆம் தேதிக்குள் டிஜிபி பதில் தர ஆணை பிறப்பித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories