பன்னாரி மாரியம்மன் கோவில் தீக்குண்ட விழா கோலாகலம்! பக்தை தவறி விழுந்ததால் பரபரப்பு!

bannariamman pukkundam - 2026

புகழ்பெற்ற பன்னாரிஅம்மன் கோயிலில் நடைபெற்ற குண்டம் இறங்கும் திருவிழாவில் பக்தை ஒருவர் தவறி விழுந்து காயமடைந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

சத்தியமங்கலத்தில் உள்ள புகழ் பெற்ற பன்னாரிஅம்மன் கோயிலில் பூக்குண்டம் இறங்கும் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் திரளாக வந்த பக்தர்கள் கலந்து கொண்டு, பூக்குண்டம் இறங்கி அம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்தினர்.

கடந்த 4ஆம் தேதி பன்னாரிஅம்மன் கோயில் குண்டம் இறங்கும் விழா பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து தினசரி சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன. சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து பக்தர்கள் திரளாக வந்து அம்மனை வழிபட்டனர். அப்போது மலைவாழ் மக்களின் பாரம்பரிய நடனங்களும் நடைபெற்றன.

விழாவின் முக்கிய நிகழ்வான தீக் குண்டம் இறங்கும் விழா இன்று நடைபெற்றது. கிராமத்தினர் மற்றும் மலைவாழ் மக்கள் கொண்டு வந்த வேம்பு, ஊஞ்சல் மரத்துண்டுகளை வைத்து நீளமான தீக்குண்டம் அமைக்கப்பட்டது. கற்பூரம் ஏற்றி குண்டத்தை மலரச் செய்ததும், அதிகாலை 4.10க்கு பூசாரி ராஜேந்திரன் குண்டத்தில் இறங்கி பூமிதித்தலைத் தொடங்கி வைத்தார். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அமுதா தீ மிதித்தார். பிறகு கல்லூரி மாணவர்கள், காவலர்கள், வனத்துறையினர் என ஆயிரக்கணக்கானோர் தீ மிதித்தனர்.

திடீரென சரோஜா என்ற பக்தை குண்டம் இறங்கியபோது, திடீரென நிலைதடுமாறி விழுந்தார். அதில் அவரது புடைவையின் சில இடங்களில் தீப் பிடித்தது. கை கால்களிலும் தீக்காயம் ஏற்பட்டது. இதனால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அப்போது அங்கிருந்த காவலர்கள், அவரைத் தாங்கிப் பிடித்து வெளியே கொண்டு வந்து முதலுதவி அளித்தனர். பின்னர் அவர் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார். இந்தச் சம்பவம் அங்கே பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Topics

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Entertainment News

Popular Categories