ஒரு கோடியே மூவாயிரம் கோடி ரூபா…! ஸ்டாலினின் தங்கை என நிரூபித்த கனிமொழி!

Published:

kanimoshi karuna - 2026

வாத்தியார் புள்ள மக்கு – என்று பழமொழி கிராமங்களில் சொல்வார்கள். அது அறிவார்ந்த விவகாரங்களில், தந்தையை போல் மகன் இருப்பதில்லை என்பதை காரணம் காட்டி.

சில நேரங்களில், அப்பனுக்குப் புள்ள தப்பாமல் பொறந்திருக்கு என்பார்கள். இது மோசமான செயல்பாடுகள், தவறான அணுகுமுறைகள் இவற்றை மையப் படுத்தி!

தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும் என்று ஒரு சொலவடை உண்டு. இப்படி பல விதங்களில் பழமொழிகள் இருந்தாலும், மக்களைக் குழப்பி திசை திருப்பி, நரித்தனம் செய்யும் நயவஞ்சகராய் இருந்தாலும், தான் எதிர்கொண்ட ஒவ்வொரு சூழ்நிலையையும் அறிவுக் கூர்மையை வெளிப்படுத்தி காரியம் சாதித்துக் கொள்வதில் கெட்டிக் காரராய் இருந்தவர் கருணாநிதி.

அவரது மகன் ஸ்டாலினுக்கோ தமிழே தகராறு. மேடைகளில் அவ்வப்போது நான் கலைஞரின் மகன். வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று பேசமாட்டேன். எதையும் ஆதாரத்தோடுதான் பேசுவேன் என்று சொல்லிச் சொல்லி பழமொழியை தவறாகக் குறிப்பிட்டு மீம்ஸ் நாயகனாகவும் நகைச்சுவைக் கதாபாத்திரமாகவும் பெயர் எடுத்துவிட்டார்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் கோலாகலம்!

கருணாநிதியின் மகள் கனிமொழியோ, அண்ணனுக்குத் தங்கை தான் தான் என்று நிரூபிக்கும் விதமாய்ப் பேசியுள்ளார்.  அவருக்கு திருப்பதி உண்டியல் சரியாக கண்ணுக்குத் தெரிகிறது. உண்டியலுக்குள் உள்ள பணம் சரியாகத் தெரிகிறது. அந்தப் பணத்தை எப்படி என்ன செய்ய வேண்டும் என்பதும் சரியாகத் தெரிகிறது. ஆனால், வேதாந்தா, ஸ்டெர்லைட் என்று வரும் போது, எவ்வளவு பணம் சொல்ல வேண்டும், எவ்வளவு சொன்னால் தனக்கு எவ்வளவு கமிஷன் தொகை கிடைக்கும்… சொல்றதோ சொல்றோம்.. ஒரு கோடி ரெண்டு கோடின்னு ரொம்ப சீப்பா சொல்லாமே மூவாயிரம் நாலாயிரம்னு ஒரு குத்துமதிப்பா சொல்லி வைப்போம் என்ற ரீதியில் பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டுக் கொண்டிருக்கிறார்.

இந்தத் தடுமாற்றமும் தப்பும் தவறுமே, கனிமொழியின் பேச்சில் உண்மைத் தன்மை இல்லை என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டது.

அவர் தூத்துக்குடியில் பேசியதன் காணொளி… இது

ஒரு கோடியே மூவாயிரம் கோடி.. செயலுவின் தங்கைதான் என நிருபித்தார்..

ALSO READ:  அருந்தமிழ் 50: திறனாய்வு!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img