December 5, 2025, 7:01 PM
26.7 C
Chennai

திமுகவை துவக்கிய ஐம்பெரும் தலைவர்களின் குடும்பங்கள் எங்கே?

dmk nalvar - 2025

திமுகவில் அண்ணாத்துரை , ஈ.வி.கே.சம்பத், நெடுஞ்செழியன், என். வி.நடராஜன், மதியழகன் ஆகியவர்கள் மட்டுமே ‘ஐம்பெரும் தலைவர்கள் ‘ என்று அழைக்கப்பட்டவர்கள்.

18.9.1949-ல் ராபின்சன் பூங்காவில் திமுகவின் துவக்கக் கூட்டத்தில் கலந்து கொண்ட 28 பேர் பட்டியலில் , மு.கருணாநிதியின் பெயர் கடைசியாக இருந்தது. திமுகவை துவக்கியவர்களில் ஒருவராக கருணாநிதி இருந்தாலும், ஐம்பெரும் தலைவர்களில் ஒருவராக அவர் இல்லை. அன்றைய ஐம்பெரும் தலைவர்கள் என்ன ஆனார்கள் ? அவர்கள் குடும்பங்கள் எங்கே ?

அண்ணாத்துரை தனது வளர்ப்பு மகன்களான டாக்டர். பரிமளம், இளங்கோவன், ராஜேந்திரன் யாரையுமே கட்சிப் பக்கமோ, ஆட்சிப் பக்கமோ அனுமதிக்கவில்லை.
அண்ணாத்துரைக்கு பிறகு, மருத்துவர் பட்டம் பெற்ற பரிமளத்தை திமுக பக்கமே அண்டவிடவில்லை கருணாநிதி. 2008 ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்ட பரிமளத்தின் வாரிசுகள் மலர்வண்ணன், செளமியன், இளவரசி போன்றோரைப் பற்றி திமுகவினருக்கு தெரியக்கூட வாய்ப்பில்லை.

மதியழகன் மீது 1970ல் லஞ்ச, ஊழல் குற்றம் சாட்டி , கருணாநிதி அவரை ராஜினாமா செய்ய வைத்தார். அந்தக் குற்றச்சாட்டுகள் முழுப்பொய்யென்று பின்பு நிரூபண மாகியது. மதியழகனை ஏன் பொய் குற்றம் சாட்டி ஓரம் கட்டினார் கருணாநிதி ? (டங்கன் ஃபாரஸ்டர் என்கிற ஆய்வாளர் ஆசியன் சர்வே என்ற பிரபல ஆய்வு பத்திரிக்கையில் Factions and Film Stars : TAMILNADU politics since 1971 என்கிற கட்டுரையில் இதைக் கூறியிருக்கிறார்.)

மதியழகன் தன்னுடைய தலைமைக்கு ஆபத்தானவர் என்று கருதிய கருணாநிதி அவர் மீது பொய் குற்றம் சாட்டி விலக்கினார். மதியழகன் பிறந்த கணியூர் குடும்பத்தை , திராவிட இயக்கத்தின் தலையாய குடும்பம் என்று கூறுவாராம் அண்ணாத்துரை.

1975ல் கருணாநிதியால் ஒதுக்கப்பட்ட நெடுஞ்செழியன் திமுகவிலிருந்து விலகி , அதிமுகவில் சேர்ந்து எம்ஜிஆர் அரசில் அமைச்சரானார். மறைந்த நெடுஞ்செழியன் மகன் மதிவாணன் , பேரன் ஜீவன் போன்றோர் எங்கு இருக்கிறார்கள் என்று நிச்சயம் இன்றைய திமுகவினருக்கு தெரியாது.

என்.வி.நடராஜன் 1975ல் காலமானார். அவருடைய மகன் என்.வி.என்.சோமு அவருக்கு பிறகு கருணாநிதியின் தலைமையை ஏற்று திமுகவில் இருந்தார்.
இப்படி முடிந்தது திமுகவின் ஐம்பெரும் தலைவர்கள் மற்றும் அவர்கள் குடும்பங்களின் கதை.

கருணாநிதி குடும்ப வாரிசுகளின் இன்றைய நிலையையும் , ஐம்பெரும் தலைவர்களின் குடும்பத்தார் நிலையையும் ஒப்பிட்டால், திமுக என்ற கட்சி எங்கு துவங்கி, எங்கு முடிந்திருக்கிறது என்பது தெரியும்.

– துக்ளக் 24.7.2019 இதழிலிருந்து…

2 COMMENTS

  1. திராவிட இயக்கத்தின் ஐம்பெரும் தலைவர்களில் , அவர்ரவர் குடும்பத்தில் யாரும் இயக்கத்தில் தொடரவில்லையே ………

    தொடரட்டும்

    இயக்கப்பணி .

    அன்புடன்

    எல்.தருமன்
    18. பட்டி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories