நீலகிரி கலெக்டராக இருந்த சுப்ரியா சாஹூயின் முயற்சியால், பிளாஸ்டிக் இல்லாத ஒரு மாவட்டமாக நீலகிரியை உருவாக்கியுள்ளார்.
ஆனால், அங்கு செல்லும் சுற்றுலா பயணிகள் சிலர் இன்னமும் ஒரு லிட்டர் பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் கொண்டு வருகிறார்கள். இதனால், அங்கு சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக தண்ணீர் ஏடிஎம் அமைக்கப்பட உள்ளது.
மாநில நெடுஞ்சாலைகளையொட்டி உள்ள பகுதிகளில் மொத்தம் 70 குடிநீர் ஏடிஎம் மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த மெஷினில் 5 ரூபாய் காயின் போட்டால், சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை பெற்றுக் கொள்ளலாம். இதன் மூலம், பிளாஸ்டிக் பாட்டில் ஒழியும் என்று நம்பப்படுகிறது. மக்களும் கலெக்டரின் திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.