ரொம்ப கஷ்டத்துல இருக்கோம் சால்வை போட்டு டிமிக்கி குடுக்காம பணமா குடுங்க ப்ளிஸ்: கெஞ்சும் மதிமுக.,!

Published:

vaiko cry - 2026மதிமுக வின் கழக நிதியை அதிகரிக்கும் அல்லது சேர்க்கும் வகையில் ம தி மு க தலைமைக் கழகம் கீழ்காணும் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

தலைமைக் கழக அறிவிப்பு, கழக நிர்வாகிகள் மற்றும் தோழர்களின் கவனத்திற்கு…

கழகப் பொதுச்செயலாளர் அவர்களுக்கு, கழகத் தோழர்கள் இனி யாரும் சால்வை அணிவித்தல் கூடாது. சால்வை அணிவிக்க விரும்புவோர் அதற்குப் பதிலாக கழகத்திற்கு நிதி வழங்கலாம்.

கழகப் பொதுச்செயலாளர் அவர்களுடன் முகப்படம் எடுத்துக்கொள்ள விரும்புவோர் குறைந்தபட்சம் நிதியாக ரூபாய் 100/- வழங்க வேண்டும். கழகத்தில் வாழ்நாள் உறுப்பினராக பதிவு செய்யாதவர்கள், உடனடியாக வாழ்நாள் உறுப்பினராக பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தலைமைக் கழகச் செயலாளர்கள், அணிகளின் நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழக நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் / துணை அமைப்பாளர்கள் வாழ்நாள் உறுப்பினராக ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் கட்டாயம் பதிவு செய்துகொள்ள வேண்டும்.

ALSO READ:  ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

என்று மதிமுக அறிவித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

 

Related articles

Recent articles

spot_img