கேரளாவில் பாலியல் புகார் கொடுத்த கன்னியாஸ்திரி சபையிலிருந்து வெளியேற்றம்…!

Published:

kerla sis - 2026
பாலியல் புகாரில் பிஷப் பிராங்கோவுக்கு எதிராக போராடிய கன்னியாஸ்திரி சபையில் இருந்து வெளியேறறி அவர் மீது கடும் நடவடிக்கை.

பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சிக்கிய ஜலந்தர் பிஷப் பிராங்கோ முளக்கலுக்கு எதிராகப் போராடிய கன்னியாஸ்திரி லூஸி களப்புரா சபையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

சீரோ மலபார் சபையின் ஜலந்தர் பிஷப்பாக இருந்தவர் பிராங்கோ முளக்கல்.

அவர் கேரளாவில் உள்ள ஒரு கான்வென்டில் கடந்த 2014 முதல் 2016 வரை பாலியல் வன்கொடுமை அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக கன்னியாஸ்திரி ஒருவர் கடந்த ஆண்டு புகார் தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் துஷ்பிரயோக புகாரில் சிக்கிய பிஷப் பிராங்கோவை கைது செய்யக் கோரி கன்னியாஸ்திரிகள் கொச்சியில் கடந்த ஆண்டு பெரும் போராட்டம் ஒன்றை நடத்தினர்.

இதைத் தொடர்ந்து பிஷப் பிராங்கோ கைது செய்யப்பட்டு . தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

இந்த நிலையில் பிஷப்புக்கு எதிராகப் போராட்டம் நடத்திய கன்னியாஸ்திரிகளில் ஒருவரான சிஸ்டர் அனுபமாவை இடமாற்றம் செய்து சபை உத்தரவிட்டது.

ALSO READ:  யுபிஐ கட்டணத்துக்கு வரியா? பரவும் வதந்தியும் அரசின் விளக்கமும்!

தொடர்ந்து தற்போது பிஷப் பிராங்கோவுக்கு எதிராகப் போராட்டம் நடத்திய கன்னியாஸ்திரி லூஸி களப்புரா என்பவரை சபையில் இருந்து அதிரடியாக நீக்கியுள்ளார்கள்.

கடந்த மே மாதம் 11 ஆம் தேதி டெல்லியில் நடந்த பொது கவுன்சிலில் கன்னியாஸ்திரி லூஸி களப்புராவை சபையைவிட்டு வெளியேற்ற ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும், சபை வழங்கிய நோட்டீசுக்கு சரியான விளக்கம் அளிக்காததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், இந்த விவகாரம் தொடர்பில் பேசிய லூசி, சபையில் இருந்து நீக்கப்பட்டதற்கான கடிதம் கிடைத்தது.

உடனடியாக சபையில் இருந்து வெளியேற மாட்டேன்.எனவும்,

இந்த நடவடிக்கையை சட்டப்படி எதிர்கொள்வது குறித்து ஆலோசித்து வருகிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.

Related articles

Recent articles

spot_img