மே மாதம் 5 முதல் 17 ஆம் தேதி வரையில் கோவையில் ராணுவத்துக்கான ஆட்சேர்ப்பு முகாம் நடைபெறுகிறது.
இந்திய ராணுவத்தின் தெற்கு மண்டல தலைமையகம், சென்னை அலுவலகத்திலிருந்து இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பு www.joinindianarmy.nic.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, கோவை பாரதியார் பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் ராணுவ ஆட்சேர்ப்பு முகாம் நடைபெறுகிறது. அதற்கு இப்போதே தேதியை குறித்து வைத்துக் கொண்டு, தயாராகிவிடுங்கள்!