“உங்களோட ஆட்டோகிராஃப் எனக்குப் போட்டுத் தரேளா”

“உங்களோட ஆட்டோகிராஃப் எனக்குப் போட்டுத் தரேளா”

(பெரியவாளிடம் ஏழு வயசு சின்னப் பையன்)

கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன்
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
நன்றி- குமுதம் பக்தி (ஒரு பகுதி)

ஒரு சமயம் பரமாசார்யா காஞ்சி மடத்துல இருந்தப்போ அவரை தரிசிக்க ஏராளமான பக்தர் கூட்டம் நிறைஞ்சு இருந்தது. அந்த சமயத்துல ஏழு வயசு இருக்கும் ஒரு சின்னப்பையன் ஓடி வந்து பெரியவா முன்னால நின்னான். யாரும் எதிர்பார்க்காதவிதமா, மகாபெரியவாகிட்டே

“சார்…இவ்வளவுபேர் உங்களைப் பார்க்க வராளே.. நீங்க வி.ஐ.பிதானே..உங்களோட ஆட்டோகிராஃப் எனக்குப் போட்டுத் தரேளா” அப்படின்னு கேட்டான்.

மகாபெரியவாளை அவன் ‘சார்’னு கூப்பிட்டதும் கையெழுத்தைக் கேட்டதும் பலருக்கு பதட்டம். ஆசார்யா என்ன சொல்லப்போறாரோன்னு நினைச்சா. ஆனா அவர் எதுவுமே சொல்லாம அந்தப் பையனைப் பார்த்து மென்மையா சிரிச்சார்.

“நான் வி.ஐ.பி. எல்லாம் இல்லைப்பா. ஆமா. எதுக்கு என்னோட கையெழுத்தைக் கேட்கிறே?”ன்னு கேட்டார்.

தன் கையில இருந்த ஆட்டோ கிராஃப் புத்தகத்தைக் காட்டின அவன்,”இதோ பார்த்தேளா. இதில பெரிய பெரிய முக்கியஸ்தர்கள்கிட்டே எல்லாம் கையெழுத்து வாங்கி சேர்த்து வைச்சிருக்கேன்.உங்க கையெழுத்தையும் போட்டுத் தந்தேள்னா பொக்கிஷமா வைச்சுப்பேன்!” இளங்கன்று பயமறியாதுங்கற மாதிரி சொன்னான்.

மடத்துக் காரியதரிசியை கூப்பிட்டார் பெரியவா.

“இந்த நோட்டுல மடத்தோட சீல் போட்டு, ஸ்ரீமந் நாராயண ஸ்துதின்னு எழுதி உன் கையெழுத்தைப் போட்டு இவன்கிட்டே குடு!” -சொன்னார்.

ஒரு சில நிமிஷத்துல அப்படியே செஞ்சு, ஆட்டோகிராஃப் நோட்டை எடுத்துண்டு வந்து குடுத்தார் மடத்துக் காரியதரிசி.அதை வாங்கிண்டவன் ,”தாங்க்யூ சார்!” அப்படின்னு சொல்லிட்டு நோட்டை பையில வைச்சுண்டு புறப்பட்டான்.

“ஒரு நிமிஷம் நிக்கறியா?” அவனைக் கூப்பிட்ட பெரியவா, “எனக்கும் ஒன்னோட கையெழுத்து வேணுமே போட்டுத தரியா?” என்று கேட்டார். சந்தோஷமா தலையாட்டினான் அந்தப் பையன். மடத்தோட ரெஜிஸ்டர் நோட்டை எடுத்துண்டு வரச் சொன்ன பெரியவா, அதுல அவனைக் கையெழுத்துப் போடச் சொன்னார். சந்தோஷமா கையெழுத்து போட்ட அவனை ஆசிர்வாதம் செஞ்சார் ஆசார்யா.

அந்தப் பையனுக்கு தானும் ஒரு முக்கியஸ்தன் தான் அப்படிங்கற எண்ணம் வரணும்.அப்படி வந்தாத்தான் அவன் வாழ்க்கைல நன்னா முன்னேறுவான், அதுக்காகத்தான் அவனையும் கையெழுத்துப் போடச் சொன்னேன்? 

 மகாபெரியவா இந்த வார்த்தையைச் சொல்லலை. ஆனா, அவரோட செயலுக்கான் காரணம் அதுதான்கறது அங்கே இருந்த எல்லாருக்குமே புரிஞ்சுது  

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories