நாமக்கல் ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து எட்டு வெற்றிலை மாலை!

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Published:

namakkal anjaneyar 1 - 2026
நாமக்கல் ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து 8 வெற்றிலை மாலை அணிவிக்கப்பட்ட காட்சி ……..

உலகப்புகழ் பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் ஆலயத்தில் உள்ள 18 அடி உயரத்தில் ஒரே கல்லால் ஆன ஆஞ்சநேயருக்கு இன்று, முதல் முறையாக 1 லட்சத்து 8 வெற்றிலை மாலை சாற்றி வழிபாடு செய்தனர்.

இந்தக் கோவிலில் நரசிம்மர்-அரங்கநாதர் சுவாமிகளை கை கூப்பி நின்று வணங்கிய படி உள்ள ஆஞ்சநேயருக்கு இன்று ஆவணி மாதம் கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு பல்வேறு சிறப்பு திருமஞ்சனமும் நடைபெற்றது.

அதன் பின், ஒரு லட்சத்தி எட்டு வெற்றிலை அலங்காரம் (1,00,008) செய்யப் பட்டு சிறப்பு அர்ச்சனையும் மஹா தீபமும் ஏற்றப்பட்டது.

namakkal anjaneyar - 2026

நாமக்கல் ஆஞ்சநேயருக்கு முதன் முறையாக இந்த 100008 வெற்றிலை அலங்காரம் சாற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வெற்றிலை அலங்காரத்தில் 25 கிலோ ரோஜா, சம்மங்கி பூ பயன்படுத்தப்பட்டு ஆஞ்சநேயப் பெருமானுக்கு அலங்காரம் செய்யப்பட்டது.

Related articles

Recent articles

spot_img