“பார்வை ஒன்றே போதுமே!” (யோகிராம் சுரத்குமார்- பெரியவா சந்திப்பு).-

“பார்வை ஒன்றே போதுமே!”

(ஆன்மிகத்தில் உயர்நிலை அடைந்தவர்கள் பேச, பார்வை மட்டுமே போதும் என்பதை அறிந்து வியந்தார் அடியவர்)

(யோகிராம் சுரத்குமார்- பெரியவா சந்திப்பு)

மார்ச் 09,2018-தினமலர்

மகா சுவாமிகள் உத்தரவின்படி திருவண்ணாமலை யோகிராம் சுரத்குமாரை சந்தித்தார் அடியவர் ஒருவர். காஞ்சிபுரம் அழைத்து வரச் சொன்ன தகவலை தெரிவித்தார். அடியவருடன் காரில் காஞ்சிபுரம் புறப்பட்டார் யோகிராம் சுரத்குமார்
.
ஆசனத்தில் அமர்ந்திருந்த சுவாமிகள், யோகியை கண்டதும் தரையில் அமர்ந்தார். யோகியும் அவர் முன்பு அமர்ந்தார். இருவரும் ஒருவரையொருவர் பார்த்து கொண்டே இருந்தனர். ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

நிமிடங்கள் கரைந்தன. அடியவர் எப்போது பேசி கொள்வர் என காத்திருந்தார்.

சிறிது நேரத்திற்கு பின் புன்முறுவல் பூத்தார் சுவாமிகள்.

”நல்லது… யோகி வந்த வேலை முடிந்தது” என எழுந்த பெரியவர், மறுபடியும் காரில் போய் திருவண்ணாமலையில் விட்டு வரச் சொல்லி அடியவருக்கு உத்தரவிட்டார்.

‘அழைத்து வந்தது ஏதோ பேசத் தானே? அது நடக்கவில்லையே’ என அடியவருக்கு ஆச்சரியம் எழுந்தது.

காரில் போகும் போது யோகி சிரித்தபடி, ”என்ன… நாங்கள் பேசிக்கொள்ளவில்லையே என நினைக்கிறீர்களா?” என கேட்டார்.

தயக்கத்தோடு ‘ஆமாம்’ என்றார் அடியவர்.

‘அவர் பார்வையாலே கேள்வி கேட்டார். நானும் பார்வையால் பதில் சொன்னேன். காஞ்சிபுரம் மடத்தின் ஆச்சார்யராக இருந்தவர் போதேந்திர சரஸ்வதி சுவாமிகள். ராம நாமம் ஜபித்து வந்த அவரின் ஜீவசமாதி தஞ்சாவூர் மாவட்டம் கோவிந்தபுரத்தில் உள்ளது. மடத்தின் பொறுப்பை சீடரிடம் ஒப்படைத்த அவர், கிராமம் தோறும் சென்று ஜாதி, மதம் பாராமல் ராம மந்திர உபதேசம் செய்தவர். ராம நாமத்தை பரப்பும் நீயும், ஏன் கோவிந்தபுரத்தில் தங்கி சேவை செய்ய கூடாது” என கேட்டார் சுவாமிகள்.

அதற்கு நான், ”இந்த பிச்சைக்காரனின் மனம் திருவண்ணாமலையில் லயித்து விட்டது. அதனால் அதை விட்டு செல்ல இஷ்டமில்லை” என்றேன்.

”அப்படியானால் அங்கேயே இரு” என்றார் சுவாமிகள்.

”இதை சொல்லவே உன்னை வர சொன்னேன். சரி… சென்று வா!”என விடை கொடுத்தார்.

ஆன்மிகத்தில் உயர்நிலை அடைந்தவர்கள் பேச, பார்வை மட்டுமே போதும் என்பதை அறிந்து வியந்தார் அடியவர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories