December 5, 2025, 6:50 PM
26.7 C
Chennai

“நானும் ஒரு பிச்சைக்காரன் தானே!”-பெரியவா

“நானும் ஒரு பிச்சைக்காரன் தானே!”-பெரியவா

(பிச்சைக்காரக் குடும்பத்துக்கு கருணை)

(“ஆமாம்..பெரியவா பிக்ஷைக்காரர்தான்!: என்றார், துடுக்கான ஒரு தொண்டர்)

உள்ளம் கவர் கள்வன் என்ற தலைப்பில்
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்

கடுமையான கோடை நாள். கிராமத்தில் தண்ணீர்ப் பஞ்சம். குடிப்பதற்குத் தேவையான தூய்மையான தண்ணீரை சேமித்து வைப்பதே பெரும் பாடாக இருந்தது.

பெரியவா ஸ்நானம் – அனுஷ்டானம் செய்வதற்காக இரண்டு மைல் தூரம் சென்று நல்ல தண்ணீர் கொண்டுவர வேண்டியிருந்தது. தொண்டர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வாளி தண்ணீர்தான் நீராடுவதற்காகக் கொடுக்கப்பட்டது.

ஸ்ரீமடம் முகாம் செய்திருந்த கட்டடத்துக்கு வெளிப்புறத்தில் ஒரு மரத்தடியில் உட்கார்ந்து பெரியவா அனுஷ்டானம் செய்து கொண்டிருந்தார்கள்.

குழந்தை குட்டிகளுடன் ஒரு பிச்சைக்காரக் குடும்பம் ஒவ்வொரு வீடாகச் சென்று கெஞ்சிக்கேட்பதும் அவர்கள் மறுப்பதும், இவர்கள் ஏமாற்றத்துடன் அடுத்த வீட்டுக்குப் போவதும்…,தொண்டர்கள் எல்லோருக்குமே தெரிந்தது.

“ஒரு பிடி அரிசி கூட பிச்சைக்காரர்களுக்குப் போட முடியாத தரித்திரர்களாகி விட்டார்களா,அந்தக் கிராமத்தினர்?

“இல்லை.அரிசி என்ன, அரை வெள்ளி கேட்டால் கூடக் கொடுக்கக் கூடியவர்கள் தான் அவர்கள்.

“இவர்கள் தண்ணீர் அல்லவா – குடி தண்ணீர் அல்லவா – கேட்கிறார்கள்.

“அப்படியானால் யார் வீட்டிலும் ஒரு சொம்பு தண்ணீர் கூட இல்லையா?

இருந்தது. தமக்கே கஷ்டம் என்னும் போது சேமித்து வைத்திருக்கும் கொஞ்சம் தண்ணீரில் ஒரு சொம்பு அளவு தானம் செய்து விட்டால் சேமிப்பில் குறைந்து விடாதா?

அத்துடன், தண்ணீர் கேட்பது யார்? ஒரு பரதேசப் பிச்சைக்காரக் குடும்பம்! ‘இவர்களுக்குத் தண்ணீர் கொடுக்காவிட்டால் ஒரு நஷ்டமும் வந்து விடாது’ என்ற மனோபாவம்.

பெரியவாள் அந்தப் பிச்சைக்காரக் குடும்பத்தை அழைத்து வரச் சொன்னார்கள். தன் அனுஷ்டானத்துக்காக கடத்தில் வைத்திருந்த தண்ணீர் முழுவதையும் அவர்களுக்குக் கொடுக்கச் சொன்னார்கள். இரண்டு கைகளையும் குழித்து வைத்து பரபரவென்று வாயால்உறிஞ்சி அவர்கள் தண்ணீர் குடித்ததை,கருணை ததும்பும் கண்களுடன் பார்த்துக் கொண்டே இருந்தார்கள்.

வயிறு நிறையத் தண்ணீர் குடித்து நெஞ்சு நிறைய நன்றியை நிரப்பிக் கொண்டு அவர்கள் போய் விட்டார்கள்.

தொண்டர்கள் செவிகளில் விழும்படியாக சற்றே உரத்த குரலில்;,

“நானும் ஒரு பிச்சைக்காரன் தானே!” என்றார்கள்.பெரியவா

“ஆமாம்..பெரியவா பிக்ஷைக்காரர்தான்!: என்றார், துடுக்கான ஒரு தொண்டர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories