“நானும் ஒரு பிச்சைக்காரன் தானே!”-பெரியவா

“நானும் ஒரு பிச்சைக்காரன் தானே!”-பெரியவா

(பிச்சைக்காரக் குடும்பத்துக்கு கருணை)

(“ஆமாம்..பெரியவா பிக்ஷைக்காரர்தான்!: என்றார், துடுக்கான ஒரு தொண்டர்)

உள்ளம் கவர் கள்வன் என்ற தலைப்பில்
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்

கடுமையான கோடை நாள். கிராமத்தில் தண்ணீர்ப் பஞ்சம். குடிப்பதற்குத் தேவையான தூய்மையான தண்ணீரை சேமித்து வைப்பதே பெரும் பாடாக இருந்தது.

பெரியவா ஸ்நானம் – அனுஷ்டானம் செய்வதற்காக இரண்டு மைல் தூரம் சென்று நல்ல தண்ணீர் கொண்டுவர வேண்டியிருந்தது. தொண்டர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வாளி தண்ணீர்தான் நீராடுவதற்காகக் கொடுக்கப்பட்டது.

ஸ்ரீமடம் முகாம் செய்திருந்த கட்டடத்துக்கு வெளிப்புறத்தில் ஒரு மரத்தடியில் உட்கார்ந்து பெரியவா அனுஷ்டானம் செய்து கொண்டிருந்தார்கள்.

குழந்தை குட்டிகளுடன் ஒரு பிச்சைக்காரக் குடும்பம் ஒவ்வொரு வீடாகச் சென்று கெஞ்சிக்கேட்பதும் அவர்கள் மறுப்பதும், இவர்கள் ஏமாற்றத்துடன் அடுத்த வீட்டுக்குப் போவதும்…,தொண்டர்கள் எல்லோருக்குமே தெரிந்தது.

“ஒரு பிடி அரிசி கூட பிச்சைக்காரர்களுக்குப் போட முடியாத தரித்திரர்களாகி விட்டார்களா,அந்தக் கிராமத்தினர்?

ALSO READ:  பஞ்சாங்கம் ஜூன் 1 - திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

“இல்லை.அரிசி என்ன, அரை வெள்ளி கேட்டால் கூடக் கொடுக்கக் கூடியவர்கள் தான் அவர்கள்.

“இவர்கள் தண்ணீர் அல்லவா – குடி தண்ணீர் அல்லவா – கேட்கிறார்கள்.

“அப்படியானால் யார் வீட்டிலும் ஒரு சொம்பு தண்ணீர் கூட இல்லையா?

இருந்தது. தமக்கே கஷ்டம் என்னும் போது சேமித்து வைத்திருக்கும் கொஞ்சம் தண்ணீரில் ஒரு சொம்பு அளவு தானம் செய்து விட்டால் சேமிப்பில் குறைந்து விடாதா?

அத்துடன், தண்ணீர் கேட்பது யார்? ஒரு பரதேசப் பிச்சைக்காரக் குடும்பம்! ‘இவர்களுக்குத் தண்ணீர் கொடுக்காவிட்டால் ஒரு நஷ்டமும் வந்து விடாது’ என்ற மனோபாவம்.

பெரியவாள் அந்தப் பிச்சைக்காரக் குடும்பத்தை அழைத்து வரச் சொன்னார்கள். தன் அனுஷ்டானத்துக்காக கடத்தில் வைத்திருந்த தண்ணீர் முழுவதையும் அவர்களுக்குக் கொடுக்கச் சொன்னார்கள். இரண்டு கைகளையும் குழித்து வைத்து பரபரவென்று வாயால்உறிஞ்சி அவர்கள் தண்ணீர் குடித்ததை,கருணை ததும்பும் கண்களுடன் பார்த்துக் கொண்டே இருந்தார்கள்.

வயிறு நிறையத் தண்ணீர் குடித்து நெஞ்சு நிறைய நன்றியை நிரப்பிக் கொண்டு அவர்கள் போய் விட்டார்கள்.

ALSO READ:  பஞ்சாங்கம் மே 30 - சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

தொண்டர்கள் செவிகளில் விழும்படியாக சற்றே உரத்த குரலில்;,

“நானும் ஒரு பிச்சைக்காரன் தானே!” என்றார்கள்.பெரியவா

“ஆமாம்..பெரியவா பிக்ஷைக்காரர்தான்!: என்றார், துடுக்கான ஒரு தொண்டர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories