“சலீமுக்கு ருத்ராட்ச மாலை” (ஒரு முஸ்லிம் பக்தனுக்கு அருள்)

“சலீமுக்கு ருத்ராட்ச மாலை”

(ஒரு முஸ்லிம் பக்தனுக்கு அருள்)

(யாரறியக்கூடும்,ஸ்ரீ பெரியவாளின் தெய்வீக சக்தியை? )

சொன்னவர்;பொள்ளாச்சி ஜெயம்மாள்
தொகுப்பாசிரியர்;கோதண்டராம சர்மா.
தட்டச்சு;வரகூரான் நாராயணன்

ஸ்ரீ பெரியவாள் மௌனியாக நாற்காலியில் தூக்கிவரப்பட்டு தரிசனம் கொடுத்த சமயம். நானும் நாகலட்சுமியும் எல்லோருடனும் க்யூவில் சென்று கொண்டிருந்தோம்.அப்பொழுது எங்களுக்குப் பின்னால் வந்து கொண்டிருந்த ஒருவன்

“சாமி சொன்னபடி நான் வந்துட்டேன்” என்று பெரியவாளைப் பார்த்துக் கும்பிடு போட்டான்.

ஸ்ரீ பெரியவாளும் மற்றவர்களைப் பார்க்காமல் அவனையே பார்த்து,கை தூக்கி ஆசீர்வாதம் செய்தார்கள்.நான் அவனை விசாரித்தேன்,அவன் தன் பெயர் சலீம் என்றும், கும்பகோணத்திலிருந்து வந்திருப்பதாகவும்சொன்னான்.

“நேற்று சொப்பனத்தில் வந்து நாளை நான் க்ஷவரம் செய்து கொள்ளும் தினம்,என்னை வந்து பார்த்துவிட்டுப் போ – என்று சாமி சொன்னார்கள். அதனால்தான் வந்தேன்” என்றான்.

அன்று வபன தினம்.ஸன்யாஸிகள் இரண்டு மாதத்திற்கு ஒரு தடவை பௌர்ணமி திதியில் தான் முண்டனம் செய்து கொள்ள வேண்டும். அது வபனம் என்ற வடமொழிச் சொல்லில் ஸ்ரீமடத்தில் குறிப்பிடுவது வழக்கம். அதெற்கென்றே நாங்கள் வருவது வழக்கம்.

ஆனால்,அந்த முஸ்லிம் பக்தனை எதற்காக வரச் சொன்னார்கள் என்று புரியவில்லை.நான் நாகலட்சுமியிடம் அவனைப் பற்றிக் கூறியபோது, ‘அவனுடைய பெயர் செல்லப்பன் என்று இருக்கக்கூடும்; தவறாக சலீம் என்று உன் காதில் விழுந்திருக்கும்’ என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே அந்த முஸ்லிம் பக்தன் மறுபடியும் எதிர்ப்பட்டான்.

அவன் ருத்ராட்ச மாலையும் அணிந்து கொண்டிருந்தான். அவனை மறுபடியும், “நீ ருத்ராட்சம் அணிந்து கொண்டிருக்கிறாய், உன்னை மசூதியில் விடமாட்டார்களே? என்று விசாரித்தோம்.

“நான் முஸ்லிம்தான்; பெயர் சலீம். சாமியை முன்பே மூன்று நான்கு தடவை பார்த்திருக்கிறேன். ஒரு தடவை இந்த ருத்ராட்ச பிரசாதத்தைக் கொடுத்தபோது, இதை என்ன செய்ய வேண்டும்? -என்று கேட்டேன்.

சாமி, இதைக் கழுத்தில் அணிய வேண்டும். ஆனால், உன்னைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கக் கூடும்,ஆகையால்,பெட்டியில் வைத்துக்கொள்” என்றார்கள்.

“நான் சாமி கொடுத்ததை கழுத்தில்தான் போட்டுக் கொள்ள வேண்டும் என்று தீர்மானம் செய்து அப்படியே போட்டுக் கொண்டேன். நான் தொழுகைக்குப் போகும் போது கூட என்னை யாரும் குறைகூறியதில்லை; மாலையைக் கழற்றச் சொன்னதுமில்லை.”

யாரறியக்கூடும்,ஸ்ரீ பெரியவாளின் தெய்வீக சக்தியை?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Topics

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

Entertainment News

Popular Categories