December 6, 2025, 3:54 AM
24.9 C
Chennai

மகனின் ஆன்மா சாந்தி அடைய-பெரியவர் சொன்ன பரிகாரம்!

”நீ வசிக்கிற கிராமத்துல ஓயாம உழைக்கிற குடியானவ ஜனங்கள் இருப்பா இல்லையா? நீ அவாளுக்கெல்லாம் மதிய வேளைல நீர்மோர் குடுக்கறதுக்கு ஏற்பாடு பண்ணு.
தவிச்சுண்டிருக்கறதா நீ சொல்றியே ஒன் பிள்ளையோட ஆன்மா, அது தவிக்கறதை விட்டு கட்டாயம் சாந்தி அடைஞ்சுடும்.”

(பெரியவர் சொன்ன பரிகாரம்!)

கட்டுரையாளர்-திருப்பூர் கிருஷ்ணன்.நன்றி-தினமலர்.

காஞ்சி பெரியவரை தரிசிக்க வந்திருந்தார் ஒரு பெண். முகத்தில் சோகமோ சோகம். அவரது பிள்ளை கல்லுாரி மாணவர். ரயிலில் அடிபட்டு காலமாகி விட்டார். தாய் வேதனையில் துடித்தார்.
அவர் சுவாமிகளைத் தேடி வந்தது தன் சோகத்திற்கு மாற்றுத் தேடி மட்டுமல்ல. விபத்தில் இறந்த உயிர்கள் ஆவியாய் அலையும் என்கிறார்களே, மகனின் ஆன்மா சாந்தி அடைய என்ன செய்வது என்பதை தெரிந்து கொள்ளவும் தான்.

ஆளாளுக்கு ஒன்று சொல்கிறார்களே? எது சரியான பரிகாரம் என்பதை எப்படி அறிவது? அதோடு அந்த ஆன்மா உண்மையிலேயே சாந்தி அடைந்ததா என்பதை எப்படி உணர்ந்து கொள்வது?
தாய் மனம் தவித்தது. சுவாமியே சரணம் என வந்து விட்டாள். மகாபெரியவர் சொன்னால் கட்டாயம் சரியாக தான் இருக்கும் என்ற நம்பிக்கை அவருக்கு.

‘சுவாமி! என் புத்திர சோகத்தை மெல்ல மெல்ல ஆற்றி கொள்வேன். ஆனால் என் புத்திரனின் ஆவி அலைந்து கொண்டிருக்கும் என்ற எண்ணத்தால் ஏற்படும் சோகத்தை தாங்க முடியவில்லை! அவன் ஆவி நற்கதி அடைய ஒரு பரிகாரம் சொல்லுங்கள். அது நற்கதி அடைந்ததை நான் எப்படி அறிவது என்பதற்கும் ஒரு வழி சொல்லுங்கள்!’

சுவாமிகள் மனத்தில் கருணை பெருகியது. அவரும் சாந்தி, ஹோமம் போன்ற பரிகாரங்களின் சக்தியை எடுத்து சொல்வதுண்டு தான். ஆனால் தன் மகனின் ஆவி நற்கதி அடைந்ததைத் தான் அறிய வேண்டும் என்கிறாளே? அருள் பொங்க பார்த்த அவர் பேசலானார்:

”நீ வசிக்கிற கிராமத்துல ஓயாம உழைக்கிற குடியானவ ஜனங்கள் இருப்பா இல்லையா? நீ அவாளுக்கெல்லாம் மதிய வேளைல நீர்மோர் குடுக்கறதுக்கு ஏற்பாடு பண்ணு.
தவிச்சுண்டிருக்கறதா நீ சொல்றியே ஒன் பிள்ளையோட ஆன்மா, அது தவிக்கறதை விட்டு கட்டாயம் சாந்தி அடைஞ்சுடும். நீர்மோர் குடிச்ச குடியானவ ஜனங்களோட முகத்தை பார். அந்த முகங்கள்ல தென்படற மலர்ச்சி தான் உன் மகன் ஆன்மா சாந்தி அடைஞ்சதோட அடையாளம். வேற பரிகாரம் ஒண்ணும் பண்ண வேண்டாம்”.

தாயின் முகத்தில் ஒரு தெளிவு ஏற்பட்டது. அப்படியே செய்கிறேன் என நமஸ்கரித்து விடைபெற்றார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories