February 20, 2026, 11:51 PM
26.7 C
Chennai

மகனின் ஆன்மா சாந்தி அடைய-பெரியவர் சொன்ன பரிகாரம்!

”நீ வசிக்கிற கிராமத்துல ஓயாம உழைக்கிற குடியானவ ஜனங்கள் இருப்பா இல்லையா? நீ அவாளுக்கெல்லாம் மதிய வேளைல நீர்மோர் குடுக்கறதுக்கு ஏற்பாடு பண்ணு.
தவிச்சுண்டிருக்கறதா நீ சொல்றியே ஒன் பிள்ளையோட ஆன்மா, அது தவிக்கறதை விட்டு கட்டாயம் சாந்தி அடைஞ்சுடும்.”

(பெரியவர் சொன்ன பரிகாரம்!)

கட்டுரையாளர்-திருப்பூர் கிருஷ்ணன்.நன்றி-தினமலர்.

காஞ்சி பெரியவரை தரிசிக்க வந்திருந்தார் ஒரு பெண். முகத்தில் சோகமோ சோகம். அவரது பிள்ளை கல்லுாரி மாணவர். ரயிலில் அடிபட்டு காலமாகி விட்டார். தாய் வேதனையில் துடித்தார்.
அவர் சுவாமிகளைத் தேடி வந்தது தன் சோகத்திற்கு மாற்றுத் தேடி மட்டுமல்ல. விபத்தில் இறந்த உயிர்கள் ஆவியாய் அலையும் என்கிறார்களே, மகனின் ஆன்மா சாந்தி அடைய என்ன செய்வது என்பதை தெரிந்து கொள்ளவும் தான்.

ஆளாளுக்கு ஒன்று சொல்கிறார்களே? எது சரியான பரிகாரம் என்பதை எப்படி அறிவது? அதோடு அந்த ஆன்மா உண்மையிலேயே சாந்தி அடைந்ததா என்பதை எப்படி உணர்ந்து கொள்வது?
தாய் மனம் தவித்தது. சுவாமியே சரணம் என வந்து விட்டாள். மகாபெரியவர் சொன்னால் கட்டாயம் சரியாக தான் இருக்கும் என்ற நம்பிக்கை அவருக்கு.

‘சுவாமி! என் புத்திர சோகத்தை மெல்ல மெல்ல ஆற்றி கொள்வேன். ஆனால் என் புத்திரனின் ஆவி அலைந்து கொண்டிருக்கும் என்ற எண்ணத்தால் ஏற்படும் சோகத்தை தாங்க முடியவில்லை! அவன் ஆவி நற்கதி அடைய ஒரு பரிகாரம் சொல்லுங்கள். அது நற்கதி அடைந்ததை நான் எப்படி அறிவது என்பதற்கும் ஒரு வழி சொல்லுங்கள்!’

சுவாமிகள் மனத்தில் கருணை பெருகியது. அவரும் சாந்தி, ஹோமம் போன்ற பரிகாரங்களின் சக்தியை எடுத்து சொல்வதுண்டு தான். ஆனால் தன் மகனின் ஆவி நற்கதி அடைந்ததைத் தான் அறிய வேண்டும் என்கிறாளே? அருள் பொங்க பார்த்த அவர் பேசலானார்:

”நீ வசிக்கிற கிராமத்துல ஓயாம உழைக்கிற குடியானவ ஜனங்கள் இருப்பா இல்லையா? நீ அவாளுக்கெல்லாம் மதிய வேளைல நீர்மோர் குடுக்கறதுக்கு ஏற்பாடு பண்ணு.
தவிச்சுண்டிருக்கறதா நீ சொல்றியே ஒன் பிள்ளையோட ஆன்மா, அது தவிக்கறதை விட்டு கட்டாயம் சாந்தி அடைஞ்சுடும். நீர்மோர் குடிச்ச குடியானவ ஜனங்களோட முகத்தை பார். அந்த முகங்கள்ல தென்படற மலர்ச்சி தான் உன் மகன் ஆன்மா சாந்தி அடைஞ்சதோட அடையாளம். வேற பரிகாரம் ஒண்ணும் பண்ண வேண்டாம்”.

தாயின் முகத்தில் ஒரு தெளிவு ஏற்பட்டது. அப்படியே செய்கிறேன் என நமஸ்கரித்து விடைபெற்றார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Topics

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

உணவே மருந்து! சர்க்கரை, இதய நோய்களில் இருந்து காத்துக் கொள்க!

இவ்வாறு உணவை சரிவிகிதமாக எடுத்து உடன் உடற்பயிற்சியையும் சேர்த்தால், நோயின்றி வாழ்வீர்கள் என்பது திண்ணம்.

Entertainment News

Popular Categories