December 6, 2025, 4:52 AM
24.9 C
Chennai

ஸ்ரீரங்கத்தில் காவிரி துலாஸ்நானம்; ஏராளமான பக்தர்கள் புனித நீராடல்!

srirangam thula - 2025
ஐப்பசி மாதம் முதல் நாளான இன்று துலா காவேரி. காவிரி ஆற்றிலிருந்து ஶ்ரீரெங்கநாதருக்கு புனித நீர் வரும் காட்சி

பூலோக வைகுண்டம் ஆன திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலில் துலா மாத பிறப்பை ஒட்டி காவிரியிலிருந்து தங்கக் குடத்தில் புனிதநீர் எடுத்து வரப்பட்டு திருமஞ்சனம் செய்யப்பட்டது.

108 வைணவ திவ்ய தேசங்களில் முதன்மையானதும் வைணவ தலைமை பீடமாகவும் பூலோக வைகுண்டம் ஆகவும் பக்தர்களால் போற்றப்படும் திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலில் துலா மாத வைபவம் இன்று காலை தொடங்கியது.

இதனை ஒட்டி திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலிலிருந்து தங்கக் குடம் எடுத்து வரப்பட்டது. அதில், அம்மா மண்டபம் புனித திருக் காவிரியில் இருந்து திருமஞ்சனத்துக்கான புனிதநீர் நிரப்பப் பட்டு, கோவில் யானை ஆண்டாள் மீது வைத்து ஊர்வலமாக கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர், நம்பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்விக்கப்பட்டது

ஐப்பசி மாதத்தை துலா மாதம் என்பர். துலா ராசியில் சூரியன் பிரவேசிக்கும் தொடக்க நாளான இன்று, கோவில் யானை ஆண்டாள் மீது தங்கம், வெள்ளிக் குடத்தில் புனித நீர் எடுத்து வரப்பட்டு ஐப்பசி மாதம் முழுவதும் நம்பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்விக்கப்படுகிறது!

gold pot - 2025

கங்கையிற் புனிதமாய காவிரி என்று ஆழ்வார் பாடிய படி, காவிரியில் நீராடினால் பாவங்கள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அம்மா மண்டபம் காவிரி படித்துறையில் இதை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர்! காவிரி புனித நீராடல் முடிந்து நம்பெருமாளை பக்தர்கள் வழிபட்டனர்.

காவிரியில் நீர்வரத்து சற்று அதிகமாக இருந்ததால் பக்தர்கள் பாதுகாப்புக்காக போலீசார் பல இடங்களில் நிறுத்தப்பட்டிருந்தனர்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories