December 5, 2025, 2:57 PM
26.9 C
Chennai

“எல்லாரும் நல்லா இருக்கணும்”-காமராஜர்

“எல்லாரும் நல்லா இருக்கணும்”

( விடைபெறும் போது காமராஜர் தழுதழுத்த குரலில், ”எல்லா மக்களும் கஷ்டமில்லாம நல்லா இருக்கணும். பெரியவங்க ஆசீர்வாதம் பண்ணணும்” என விண்ணப்பம் செய்தார். மகாசுவாமிகள் ஆசியளித்து குங்குமப் பிரசாதம் கொடுத்தார்.)

நேற்றைய தினமலர்

  திருப்பூர் கிருஷ்ணன்  

ஒருசமயம் காஞ்சிபுரத்தில் தேர்தல் நிதி வசூல் பற்றிய கூட்டம் ஒரு திரையரங்கில் நடந்தது. அதில் பங்கேற்க காஞ்சிபுரம் வந்தார் முன்னாள் முதல்வர் காமராஜர். அவரிடம் எழுத்தாளர் பரணீதரன், மகாசுவாமிகளை தரிசிக்க செல்வோம் என அன்புடன் அழைத்தார்.

”இப்போ தேர்தல் வேலையா வந்திருக்கேன். அவரைப் பாத்தா நான் வேற வேலையா வந்த போது போகிற போக்கில் அவரையும் பாத்துட்டு வந்ததா ஆயிடும். அது சரியில்லை. அவரைச் சந்திக்க ஒரு தடவை தனியா வர்றேனே” என்றார். அவரது பதில் மகாசுவாமிகள் மீதிருந்த மரியாதையை காட்டியது.

காமராஜர் காலமாவதற்குச் சில மாதங்களுக்கு முன் காஞ்சிபுரத்தில் மகாபெரியவரை தரிசித்த நிகழ்ச்சி வரலாற்றில் பதிவாகியுள்ளது.

அப்போது திருவண்ணாமலை சென்ற காமராஜர் காஞ்சிபுரத்திற்கும் வருவதாக மடத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

”அவருக்கு உடம்பு சரியில்லே. ரொம்ப துாரம் நடக்க வைக்க வேண்டாம். கார் எவ்வளவு துாரம் வர முடியுமோ அத்தனை துாரம் வர ஏற்பாடு பண்ணுங்கோ! பாதையில் கல்லும் முள்ளும் இல்லாமல் சரி செய்யுங்கோ” என சீடர்களிடம் உத்தரவிட்டார். காமராஜர் உட்கார ஆசனமும் ஏற்பாடானது.

காமராஜர் வந்ததும் உட்காரும்படி சைகை காட்டினார் மகாபெரியவர். ஆனால் அவர் மரியாதை காரணமாக நின்றார். இருவரும் பேசவில்லை. ஒருவரையொருவர் பார்த்தபடி இருந்தனர்.

மவுனமாக மகாசுவாமிகள் என்ன சொன்னார் எனத் தெரியவில்லை.

விடைபெறும் போது காமராஜர் தழுதழுத்த குரலில், ”எல்லா மக்களும் கஷ்டமில்லாம நல்லா இருக்கணும். பெரியவங்க ஆசீர்வாதம் பண்ணணும்” என விண்ணப்பம் செய்தார். மகாசுவாமிகள் ஆசியளித்து குங்குமப் பிரசாதம் கொடுத்தார்.

காரில் திரும்பும் போது பெரியவர் கொடுத்த பிரசாதத்தை பொக்கிஷமாக கருதி கையிலேயே வைத்திருந்தார். மகாசுவாமிகள் மீது அவருக்கு இருந்த அளவற்ற மரியாதையைக் காட்டியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories