காஞ்சி மகாபெரியவரின் தெய்வத்தின் குரல் ஹிந்தியில்..! கண்காட்சி திறப்பு!

kanchi - 2026

காஞ்சி மகானின் அருள் மொழி வடமாநிலங்களில் ஒலிக்கும்

தமிழகத்தில் தோன்றி உலகளவில் போற்றப்பட்ட காஞ்சி மகானின் வாழ்க்கை சரித்திர ஓவிய கண்காட்சி சென்னையில் தொடங்க இருக்கிறது. தமிழ் மக்களால் அன்புடன் பெரியவர் என்று போற்றப்பட்ட காஞ்சி மஹாஸ்வாமிகளின் ஓவிய கண்காட்சியை , வருகிற செவ்வாய் , ஜனவரி 21 அன்று ராஜ கீழ்பாக்கத்தில் வித்யா மந்திர் பள்ளி வளாகத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் ஜி பாகவத் திறந்து வைக்கின்றார். தவத்திரு ஓம்காரானந்தா ஸ்வாமிகள் கலந்து கொள்கிறார்.

சாமானியர்களுக்கும் புரியவேண்டும் என்பதற்காக உயர்ந்த தத்துவங்களை இனிய தமிழில் எளிய நடையில் எடுத்துரைத்த அவரது சொற்பொழிவுகளின் தொகுப்பான ‘தெய்வத்தின் குரல்’ ஹிந்தியில் வெளியிடப்படுகிறது!

ஆங்கிலம், மராட்டி, கன்னடம் ஆகிய மொழிகளில் ஏற்கெனவே இந்த பள்ளியை நடத்தும் ட்ருஸ்ட் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. காஞ்சி மஹாசுவாமிகள் அபார திறமை பெற்றிருந்தார். அவர் இசைத்துறைக்கு சென்றிருந்தால் சிறந்த இசைக் கலைஞர் ஆகியிருப்பார். அவர் அறிவியல் படிக்க சென்றிருந்தால் சிறந்த விஞ்ஞானி ஆகியிருப்பார்.

Kanchi Paramacharya With Kamakshi Amman - 2026

ஆனால் அனைத்து திறமைகளையும் நம் தர்மத்திற்காகவும் சாமான்ய மக்கள் முதல் அனைவரின் நண்மைக்காகவும் அர்ப்பணித்த அவரது தவ வாழ்கையின் அம்சங்கள் ஓவியக் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன..

நம் நாட்டினை நடந்தே வலம் வந்து, கடுமையான சூழ்நிலையில் காஞ்சி மடத்தை நிர்வகித்து அதன் மூலம் பல தொண்டு வேலைகள் தொடங்கியது போன்றவை 56 ஓவியங்களாக சித்திரிக்கப்பட்டுள்ளன.

காஞ்சி மடாதிபதி பூஜ்யஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். எளிய தமிழில் அனைத்து சம்ஸ்கிருத வேதாந்த பாடங்களை கற்று தரும் தவத்திரு ஸ்வாமி ஓம்காரானந்தா கலந்து கொள்வது மற்றொரு சிறப்பான அம்சமாகும்.

திரு ஆர் ஏ சங்கர நாராயணன் , M.D & CEO , கனரா வங்கி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். ஹிந்தி மொழியில் தெய்வத்தின் குரல் வெளிவருவது காஞ்சி மகானின் அற்புத சிந்தனைகளை வட மாநிலத்தவர்கள் படித்து பயன் பெறுவார்கள் என்பது தமிழ் மக்களுக்கு பெருமையும் ஆனந்தமும் தருகிறது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories