December 5, 2025, 4:03 PM
27.9 C
Chennai

காஞ்சி மகாபெரியவரின் தெய்வத்தின் குரல் ஹிந்தியில்..! கண்காட்சி திறப்பு!

kanchi - 2025

காஞ்சி மகானின் அருள் மொழி வடமாநிலங்களில் ஒலிக்கும்

தமிழகத்தில் தோன்றி உலகளவில் போற்றப்பட்ட காஞ்சி மகானின் வாழ்க்கை சரித்திர ஓவிய கண்காட்சி சென்னையில் தொடங்க இருக்கிறது. தமிழ் மக்களால் அன்புடன் பெரியவர் என்று போற்றப்பட்ட காஞ்சி மஹாஸ்வாமிகளின் ஓவிய கண்காட்சியை , வருகிற செவ்வாய் , ஜனவரி 21 அன்று ராஜ கீழ்பாக்கத்தில் வித்யா மந்திர் பள்ளி வளாகத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் ஜி பாகவத் திறந்து வைக்கின்றார். தவத்திரு ஓம்காரானந்தா ஸ்வாமிகள் கலந்து கொள்கிறார்.

சாமானியர்களுக்கும் புரியவேண்டும் என்பதற்காக உயர்ந்த தத்துவங்களை இனிய தமிழில் எளிய நடையில் எடுத்துரைத்த அவரது சொற்பொழிவுகளின் தொகுப்பான ‘தெய்வத்தின் குரல்’ ஹிந்தியில் வெளியிடப்படுகிறது!

ஆங்கிலம், மராட்டி, கன்னடம் ஆகிய மொழிகளில் ஏற்கெனவே இந்த பள்ளியை நடத்தும் ட்ருஸ்ட் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. காஞ்சி மஹாசுவாமிகள் அபார திறமை பெற்றிருந்தார். அவர் இசைத்துறைக்கு சென்றிருந்தால் சிறந்த இசைக் கலைஞர் ஆகியிருப்பார். அவர் அறிவியல் படிக்க சென்றிருந்தால் சிறந்த விஞ்ஞானி ஆகியிருப்பார்.

Kanchi Paramacharya With Kamakshi Amman - 2025

ஆனால் அனைத்து திறமைகளையும் நம் தர்மத்திற்காகவும் சாமான்ய மக்கள் முதல் அனைவரின் நண்மைக்காகவும் அர்ப்பணித்த அவரது தவ வாழ்கையின் அம்சங்கள் ஓவியக் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன..

நம் நாட்டினை நடந்தே வலம் வந்து, கடுமையான சூழ்நிலையில் காஞ்சி மடத்தை நிர்வகித்து அதன் மூலம் பல தொண்டு வேலைகள் தொடங்கியது போன்றவை 56 ஓவியங்களாக சித்திரிக்கப்பட்டுள்ளன.

காஞ்சி மடாதிபதி பூஜ்யஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். எளிய தமிழில் அனைத்து சம்ஸ்கிருத வேதாந்த பாடங்களை கற்று தரும் தவத்திரு ஸ்வாமி ஓம்காரானந்தா கலந்து கொள்வது மற்றொரு சிறப்பான அம்சமாகும்.

திரு ஆர் ஏ சங்கர நாராயணன் , M.D & CEO , கனரா வங்கி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். ஹிந்தி மொழியில் தெய்வத்தின் குரல் வெளிவருவது காஞ்சி மகானின் அற்புத சிந்தனைகளை வட மாநிலத்தவர்கள் படித்து பயன் பெறுவார்கள் என்பது தமிழ் மக்களுக்கு பெருமையும் ஆனந்தமும் தருகிறது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories