December 7, 2025, 1:51 AM
25.6 C
Chennai

“ராமநாதஸ்வாமி கோவில் நடராஜாவுக்கு செக்கு ஆட்டிய நல்லெண்ணெய் அபிஷேகம் உண்டா”? மற்றும் திருவாதிரை அன்று,ஏழு படுதாக்கள் திரையும்-பெரியவாளின் கேள்வி

(திருவாதிரை ஸ்பெஷல் போஸ்ட்-10-01-2020ஆருத்ரா தரிசனம்)

( ராமேஸ்வரத்தில் செக்கே கிடையாது! அந்த க்ஷேத்திரத்து ஸ்வாமி, மண்ணைப் பிடித்து வைத்து உருவாக்கப்பட்டவர். செக்கு ஆட்டக்கூடாது என்று ஓர் ஐதீகம்-அற்புத விளக்கம் கொடுத்த பெரியவா.)( அந்த க்ஷேத்திரத்திலுள்ளவர்களுக்குக் கூடத் தெரியாத பல செய்திகள்)

சொன்னவர்; ஸ்ரீமடம் பாலு..
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்

ஒவ்வொரு க்ஷேத்திரத்திலும் தனிப்பட்ட வழிபாட்டு முறைகள் வழக்கத்திலிருக்கும். அந்த க்ஷேத்திரத்திலுள்ளவர்களுக்குக் கூடத் தெரியாத பல செய்திகள் பெரியவாளுக்குத் தெரிந்திருக்கும்.

இராமேஸ்வரத்திலிருந்து வந்தார், ஒரு புரோகிதர். மூன்று தலைமுறைகளாக அந்த ஊரிலேயே இருந்து வருவதாகச் சொன்னார்.

“ராமநாதஸ்வாமி கோவில் நடராஜாவைப் பார்த்திருக்கியோ?”

“பார்த்திருக்கேன். சேவார்த்திகளை அழைத்துக் கொண்டு போய் காட்டியிருக்கேன்.”

“நடராஜாவுக்கு ஏழு திரைகள் உண்டோ?”

புரோகிதருக்குக் குழப்பம் வந்துவிட்டது. என்ன பதில் சொல்வதென்று புரியவில்லை.

பெரியவா சொன்னார்கள்.

“திருவாதிரை அன்னிக்கு, ஏழு படுதாக்கள் திரையாகப் போட்டு, நடராஜருக்குப் பூஜை செய்வார்கள். ஏழு திரை விலகியதும் நடராஜாவைத் தரிசிக்கலாம்….சரி அந்தக் கோவிலில் எத்தனை நடராஜர் இருக்கு?”

ராமேஸ்வரத்தாருக்குக் கொஞ்சம் நடுக்கம்.

“நான் ஒரு நடராஜாவைத்தான் பார்த்திருக்கேன்”

“மூணு நடராஜர் இருக்கு!…போய்ப் பார்…”

“ராமேஸ்வரம் கோவிலில், குருவாயூரைப் போல், செக்கு ஆட்டிய நல்லெண்ணெய் அபிஷேகம் செய்வது வழக்கமா?”

“ஆமாம்” என்று ஒரு போடு போட்டார், வந்தவர்.

“ராமேஸ்வரத்தில் செக்கே கிடையாது! அந்த க்ஷேத்திரத்து ஸ்வாமி, மண்ணைப் பிடித்து வைத்து உருவாக்கப்பட்டவர். செக்கு ஆட்டக்கூடாது என்று ஓர் ஐதீகம்…”

பின்னர், அந்தப் புரோகிதர் மனத்தில் ஒரு குறை இருக்கக் கூடாது என்பதற்காக, குடும்ப க்ஷேமலாபங்கள் விசாரித்துப் பிரசாதம் கொடுத்தார்கள், பெரியவா.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

Topics

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Entertainment News

Popular Categories