December 7, 2025, 7:27 AM
24 C
Chennai

புருஷனைக் காப்பாற்ற கதறிய லம்பாடிப் பெண்

புருஷனைக் காப்பாற்ற கதறிய லம்பாடிப் பெண்

“சத்யவான் – சாவித்திரி கதை புராணத்தில் படிக்கிறோம்.இவளும் சாவித்திரி தான். ஆனா நான்”… பெரியவா – வார்த்தையை முடிக்குமுன்

(“…எமன் இல்லே!….எமனுக்கு எமன் ….காலகாலன்” -ஒரு தொண்டர்)(நாளை காரடையான் நோன்பு 14-03-2020 ஸ்பெஷல் பதிவு)

சொன்னவர்; ஸ்ரீமடம் பாலு.
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மாதட்டச்சு;வரகூரான் நாராயணன்.

ஹூசூர் அம்மன் ஆலயத்தில் பெரியவா தங்கி இருந்தார்கள்.

கோயிலுக்கு வெளியே, ஒரு எருமைமாட்டு வண்டி வந்து நின்றது. அதை ஓட்டிக்கொண்டு வந்தவள் ஒரு லம்பாடிப்  பெண். அவள் புருஷனுக்குக் கடுமையான காய்ச்சல், வாந்தி, பேதி,..அவனைத் தான், அந்த வண்டியில் அழைத்து வந்திருந்தாள்.

பெரியவா, கோயிலில் தங்கியிருப்பதைத் தெரிந்து கொண்டு, அவர்கள் அனுக்ரஹம் செய்தால், தன் கணவன் உயிர் பிழைப்பான் என்ற நம்பிக்கையுடன் வந்திருந்தாள்.. 

வண்டியில் படுத்திருந்த தன் புருஷனை, ஒரு குழந்தையைத் தூக்குவது போல அலாக்காகத் தூக்கிக் கொண்டு வந்து, பெரியவா முன்பு தரையில் கிடத்தினாள். இரு கைகளையும் கூப்பிக்கொண்டு, காரே – பூரே என்று ஏதோ பாஷையில் பிரார்த்தித்தாள்.

பெரியவா, உடனிருந்த தொண்டர்களிடம் சொன்னார்;.

“இந்த லம்பாடிக்கு, எவ்வளவு பதிபக்தி பாரு, ஒரு ஆண்பிள்ளையை….புருஷனை..தான் ஒன்றியாகவே தூக்கிக் கொண்டு வந்திருக்காளே! பகவான், இவளுக்கு அவ்வளவு சக்தியைக் கொடுத்திருக்கான்……

“சத்யவான் –  சாவித்திரி கதை புராணத்தில் படிக்கிறோம். இவளும் சாவித்திரி தான். ஆனா, நான்….என்று மெல்லிய முறுவலுடன் சொல்லும்போதே, அடுத்து என்ன சொல்லப் போகிறார்கள் என்பதைத் தெளிவாகவே ஊகிக்க முடிந்தது.

“……எமன் இல்லே!… எமனுக்கு எமன்  –  காலகாலன்!” என்று ஒரு தொண்டர் சொல்லி முடித்தார்.

பெரியவா மிக்க கனிவுடன், ஒரு ஆரஞ்சுக் கனியை அளித்து அனுக்ரஹம் செய்தார்கள்.

மறுநாள் அந்த லம்பாடிப் பெண்ணும்,அவளுடைய புருஷனும் ஜோடியாக நடந்து வந்தார்கள். தரிசனத்துக்கு.

முந்தைய தினம் பார்த்தபோது, அந்தப் புருஷன் பிழைப்பானா என்ற கேள்விகுறி இருந்தது.ஆனால் இன்றைக்கோ,உற்சாகமாக நடந்து வந்து நமஸ்காரம் செய்கின்றான் அவன்.

லம்பாடிப் பெண்ணின் கண்களில் ஏராளமான கண்ணீர் பெருக்கு. “தேவுடு – தேவுடு” என்று சொல்லிச் சொல்லி, விழுந்து விழுந்து வணங்கினாள்.

காலகாலர் கொடுத்தது, ஆரஞ்சுக் கனியா அல்லது அமிர்தக் கனியா?

லம்பாடிப் பெண்ணுக்குத்தான் விடை தெரியும்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

Topics

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Entertainment News

Popular Categories