ஒரு பக்தர் ஒருமுறை ஜகத்குரு ஸ்ரீ பாரதி தீர்த்த மகாஸ்வாமிகளை அணுகி தனது சகோதரிக்கு சுவாமிகளின் ஆசீர்வாதம் வேண்டும் என்று கூறினார். திருமணமாகி பல வருடங்கள் ஆனாலும், அவரது சகோதரி குழந்தை இல்லாமல் இருந்தார். இது பக்தரை கவலையடையச் செய்தது. பக்தரின் பிரச்சினையைப் பற்றி ஆச்சார்யாள் கேள்விப்பட்டபோது, ”எல்லாம் சரியாகிவிடும்” என்று அவர் ஆசீர்வதித்தது அனுப்பினார்.
விரைவில் அவரது சகோதரி கருத்தரித்தார். அவர் வழக்கமான சோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் மற்றும் ஸ்கேன் அறிக்கைகள் ஒரு பெண் குழந்தையை காட்டின. பிரசவ வலியின் எந்த அறிகுறிகளும் இல்லாமல் அவள் உரிய தேதி கடந்து சென்றபோது, அவளுடைய பெற்றோர் அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவளை பரிசோதித்தபின், கருவின் எந்த அசைவையும் அவர்கள் காணவில்லை என்று மருத்துவர்கள் சொன்னார்கள்.
பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். ஆச்சார்யாளீன் தீவிர பக்தராக இருந்த அவர்கள், ஆச்சார்யளின் புகைப்படத்தின் முன் சில பழங்களை வைத்து, “இந்த குழந்தை உங்கள் ஆசிர்வாததின் பரிசு. குழந்தைக்கு எதுவும் நடக்காது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்” என்று உறுதியாகக் கூறினர். இதைச் சொல்லி அவர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் “ஸ்ரீ குரு பாஹிமாம்” என்று கோஷமிடத் தொடங்கினர்.
இதையடுத்து மருத்துவர்கள் சிசேரியன் செய்தனர் ஆரோக்கியமான ஆண் குழந்தையை அந்த பெண் பிரசவித்தாள். ஒரு ஆரோக்கியமான ஆண் குழந்தையை பிரசவிப்பது பற்றி பெற்றோர்கள் அறிந்தபோது, ஆச்சார்யாள் மீது அவர்களின் நன்றிக்கு எல்லையே இல்லாமல் பக்தி மேலோங்கியது. ஸ்ரீ குருப்யோ நம: