மணவாள மாமுனிகள் அருளிச் செய்த ஸ்ரீதேவராஜ மங்களம்!

Published:

devarajamangalam
devarajamangalam

காஞ்சி வரதராஜப் பெருமாளை மங்களாசாசனம் செய்யும் விதமாக தேவராஜ மங்களம் என்னும் அருமையான துதியை மணவாள மாமுனிகள் இயற்றியுள்ளார். அனைத்து மங்களங்களையும் தரவல்ல அந்தத் துதி தமிழாக்கத்துடன் இங்கே…!

அப்பிள்ளை அருளிய தனியன்

யச் சக்ரே தேவராஜஸ்ய மங்களாசாஸனம் முதா |
தம் வந்தே ரம்யஜாமாத்ருமுநிம் விசத வாக்வரம் ||

ஸ்ரீ தேவராஜ மங்களாசாஸந ஸ்தோத்ரத்தைத் திருவுள்ளம் உகந்து அருளிச்செய்த விசதவாக்சிகாமணிகள் என்று புகழ்பெற்ற ஸ்வாமி மணவாளமாமுனிகளை வணங்குகிறேன்.


மங்களம் வேதஸோ வேதிமேதினீ க்ருஹமேதினே |
வரதாய தயாதாம்னே தீரோதாராய மங்களம் ||

பிரம்மாவின் வேள்விச்சாலையை இருப்பிடமாய்க் கொண்டவரும், கருணைக்கு இருப்பிடமானவரும், வீரம், வள்ளல் தன்மை உடையவருமான ஸ்ரீவரதராஜப் பெருமாளுக்கு மங்களம்.

வாஜிமேதே வபாஹோமே தாதுருத்தர வேதித: |
உதிதாய ஹுதாதக்நே: உதாராங்காய மங்களம் ||

பிரம்மாவின் அஸ்வமேத வேள்வியில் ஹோமம் செய்தவுடன், ஹோம அக்னியில் இருந்து உதித்தவரும், அழகான திருமேனியை உடையவருமான வரதராஜப் பெருமாளுக்கு மங்களம்.

ALSO READ:  ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

யஜமானம் விதிம் வீக்ஷ்ய ஸ்மயமான முகச்ரியே |
தயமான த்ருசே தஸ்மை தேவராஜாய மங்களம் ||

தன்னைக் காண விழைந்த பிரம்மாவை நோக்கிக் கருணையோடு புன்முறுவல் செய்தபடி தோன்றிய வரதராஜப் பெருமாளுக்கு மங்களம்.

வாரிதச்யா மவபுஷே விராஜத் பீதவாஸஸே |
வாரணாசல வாஸாய வாரிஜாக்ஷாய மங்களம் ||

கார்மேக வண்ணரும், மஞ்சள் பட்டாடை அணிந்தவரும், அத்திகிரி மலைமேல் திகழ்பவரும், தாமரைக் கண்ணருமான வரதராஜப் பெருமாளுக்கு மங்களம்.

அத்யாபி ஸர்வபூதானாம் அபீஷ்ட பலதாயினே |
ப்ரணதார்த்தி ஹராயாஸ்து ப்ரபவே மம மங்களம் ||

அனைத்து உயிர்களுக்கும் விரும்பிய வரங்களைத் தருபவரும், தன்னைச் சரணடைந்தோரின் துயரங்களைப் போக்குபவரும், நமக்குத் தலைவருமான வரதராஜப் பெருமாளுக்கு மங்களம்.

திவ்யா வயவ-ஸௌந்தர்ய-திவ்யாபரண-ஹேதவே |
தந்தாவள கிரீசாய தேவராஜாய மங்களம் ||

அழகிய அங்கங்களும், திவ்விய ஆயுதங்களும் கொண்டவராய் அத்திகிரி மேல் திகழும் வரதராஜப் பெருமாளுக்கு மங்களம்.

புருஷாய புராணாய புண்யகோடி-நிவாஸினே |
புஷ்பிதோதார-கல்பத்ரு கமநீயாய மங்களம் ||

மிகத் தொன்மையானவரும், புண்ணியகோடி விமானத்தில் எழுந்தருளியிருப்பவரும், கற்பக மரம் போன்றவருமான வரதராஜப் பெருமாளுக்கு மங்களம்.

ALSO READ:  அதிர்ச்சி... அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

காஞ்சனாசல ச்ருங்காக்ர-காலமேகாநு ஸாரிணே |
ஸுபர்ணா ஸாவதம்ஸாய ஸுரராஜாய மங்களம் ||

பொன்மலையின் உச்சியில் கார்மேகம் விளங்குவது போல் கருட சேவையில் காட்சிதரும் வரதராஜப் பெருமாளுக்கு மங்களம்.

போகாபவர்க யோரேகம் வாஞ்சத்ப்யோ தததே த்வயம் |
ஸ்ரீமத் வரதராஜாய மஹோதாராய மங்களம் ||

இம்மை, மறுமை ஆகிய இரண்டுக்குமுரிய வரங்களை அடியார்களுக்கு அள்ளித் தரும் கருணைமிக்க வரதராஜப் பெருமாளுக்கு மங்களம்.

மதங்கஜாத்ரி-துங்காக்ர-ச்ருங்க ச்ருங்கார-வர்ஷ்மணே |
மஹாக்ருபாய மத்ரக்ஷா-தீக்ஷிதாயாஸ்து மங்களம் ||

அத்திகிரி மலை உச்சிக்கு ஆபரணமாய்த் திகழ்பவரும், அடியார்களைக் காப்பதில் உறுதியாய் நிற்பவரும், கருணை மிக்கவருமான வரதராஜப் பெருமாளுக்கு மங்களம்.

ஸ்ரீகாஞ்சீபூர்ணமிச்ரேண ப்ரீத்யா ஸர்வாபிபாஷிணே |
அதீதார்ச்சா-வ்யவஸ்த்தாய ஹஸ்த்யத்ரீசாய மங்களம் ||

அர்ச்சாவதார நிலையை மீறித் தன் கருணையால் திருக்கச்சி நம்பிகளிடம் உரையாடிய வரதராஜப் பெருமாளுக்கு மங்களம்.

அஸ்து ஸ்ரீஸ்தனகஸ்தூரீ-வாஸனா-வாஸிதோரஸே |
ஸ்ரீஹஸ்திகிரிநாதாய தேவராஜாய மங்களம் ||

திருமகளின் திருமார்பிலுள்ள சந்தனம், குங்குமத்தின் நறுமணம் கமழும் திருமார்பை உடையவரான வரதராஜப் பெருமாளுக்கு மங்களம்.

மங்களாசாஸனபரை : மதாசார்யபுரோகமை:
ஸர்வைச்ச பூர்வை : ஆசார்யை : ஸத்க்ருதாயாஸ்து மங்களம்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அஸ்ஸாம்

இறைவனுக்குப் பல்லாண்டு பாடுவதையே தொழிலாகக் கொண்ட நமது குருமார்களால் போற்றப்பட்ட பெருமாளுக்கு மங்களம்!

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img