த்வேஷமின்மை, சிநேகம், தயை, அஹங்காரம் மற்றும் மமகாரம் இல்லாமை, இன்பத்தையும் துன்பத்தையும் சமமாய்க் கருதுவது பொறுமை ஆகியவை நம் ஜீவனத்தில் இருந்துவிட்டால் நாம் வாழ்க்கையில் எப்போதும் ஆனந்தத்தை அனுபவிக்கலாம்.
இத்தகைய குணங்களைப் பெறுவதற்கு பகவானுடைய கிருபை தேவை. நாம் பகவானுடைய சன்னிதியில், “என்னுடைய ஜீவனத்தை நான் நல்ல வழியில் அமைத்துக்கொள்ள விரும்புகிறேன். எனக்கு அருள் செய்” என்று வேண்டிக்கொண்டால், நமக்கு நிச்சயமாக இறைவனின் அனுக்ரஹம் கிடைக்கும்;
அதன் மூலம் நாம் நம்முடைய முயற்சிகளில் வெற்றியை அடையலாம்.