சபரிமலை மண்டல பூஜை பணிகள் துவக்கம்..

Published:

IMG 20230929 193921 - 2026
#image_title

சபரிமலை வரும் நவ 16 கார்த்திகை முதல் துவங்க உள்ள 41நாள் மண்டல பூஜைக்கான பணிகள் தொடங்கியது. சன்னிதானம் பம்பை மற்றும் சுற்றுப்பகுதிகளில் சுத்தம் செய்ய
1000 பணியாளர்களை நியமிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

சபரிமலை பாதைகள் சுகப்படுத்தப்படுவதற்கு ஆயிரம் பணியாளர்களை நியமிப்பதற்கு மாநில அரசாங்கத்திற்கு பரிந்துரைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் டாக்டர். திவ்விய எஸ் அய்யர் கூறினார். சபரிமலை சானிடேஷன் சொசைட்டி யோகத்தில் கலந்து கொண்டு பத்தாம்பூர் கலாக்டரேட்டில் கலந்து கொண்டு கலெக்டர் பேசினார்.

சன்னிதானம், பம்பை, நிலக்கல், பந்தளம், குளநடத்தல் தீர்த்தோதனப் பாதைகள் சுத்தம் செய்ய இவர்களுக்கு கடந்த ஆண்டு 450 ரூபாய் வழங்கப்பட்டது. இதை மேம்படுத்துவதற்கு இந்த ஆண்டு பரிந்துரைக்கப்படுகிறது. பயண படி இனத்தில் 1000 ரூபாய் வழங்கப்படும். புனித ஸ்தாபனங்களின் செயல்பாடு மற்றும் நலனை மதிப்பீடு செய்ய வெல்ஃபெயர் அலுவலகம் நியமிக்கப்படும். புனித சேனாங்கங்களுக்கு பார் சோப், பாத் சோப், எண்ணெய், மாஸ்க், கிளௌஸ் போன்ற அத்தியாவசியசாதனங்கள் அரசு நிறுவனங்களில் இருந்து நேரடியாக வாங்கப்படும்.

ALSO READ:  முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!


யூனிஃபோம், டிராக் ஸ்யூட், சானிடேஷன் கருவிகள், யூனிஃபார்மில் முத்திரை பதிப்பிக்கல் ஆகியவற்றிற்காக குவட்டேஷன் அழைக்கப்படும். 14 டிராக்டர் டெயிலர்கள் வாடகைக்கு எடுக்கப்படும். சன்னிதானம், பம்பை ஆகிய இடங்களில் மூன்று வீதமும், நிலக்கல் எட்டு டிராக்டரும் வினியோகிக்கப்படுவதாகக் கூறினார்.
சபரிமலை சன்னிதானம் சொசைட்டியின் 2022-23 ஆண்டு வரவு செலவு கணக்குகள் கூட்டம் அங்கீகரிக்கப்பட்டது. கடந்த சபரிமலை தீர்த்தடன காலத்தின் புனித ஸ்தாபனத்தின் செயல்பாடுகள் சிறந்ததாக இருந்தது என்று மதிப்பிடப்பட்டது.
மாவட்ட காவல் அதிகாரி வி.அஜித், ஏ.டி.எம்.பி. ராதாகிருஷ்ணன், திருவல்லா சப் கலெக்டர் சஃப்னா நஸ்ருதீன், வாஸ்துவித்யா குருகுலம் நிர்வாக இயக்குனர் டி.ஆர்.சதாசிவன் நாயர், பேரிடர்நிவாரணம் மாநகராட்சி கலெக்டர் டி.ஜி. கோபகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img