திரு நாமம் பாட… திருப்பாவை மாதம்!

andal rangamannar - 2026
ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் ரங்கமன்னார் 

“த்யாயன் க்ருதே, யஜன் யஜ்ஞை: த்ரேதாயாம், த்வாபரே அர்ச்சயன், யதாப்நோதி, ததாப்நோதி கலௌ சங்கீர்த்ய கேசவம்” என்று விஷ்ணு புராணம் கூறுகிறது.

இதன் கருத்து க்ருத யுகத்தில் த்யானத்தினாலும் த்ரேதா யுகத்தில் யாக யஜ்ஞங்களாலும் த்வாபர யுகத்தில் பகவானுக்கு செய்யும் அர்ச்சனை யினாலும் எந்த பயனை ஒருவன் அடைகிறானோ அந்தப்பலனை கலியுகத்தில் பகவான் நாராயணனுடைய திருநாம சங்கீர்த்தனம் செய்வதாலேயே அடைந்து விடுகிறான் என்பது.

கலியுகம் மிகக்கொடியதாய் இருந்தாலும் இந்த சுலபமான வழி இதில் இருப்பதனால் மற்ற யுகங்களைக் காட்டிலும் இதுவே உயர்ந்தது என்று வைணவ ஆசார்யர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வளவு பெருமைகள் வாய்ந்த நாமசங்கீர்த்தனத்திற்கான மாதம் பிறந்து விட்டது. ஆம், அதுவே திருப்பாவை மாதம் என்கிற மார்கழி மாதம்.

வேதம் அனைத்துக்கும் வித்தான கோதை தமிழான திருப்பாவை முப்பது பாசுரங்களிலும் பகவானுடைய நாமசங்கீர்த்தனம் உள்ளது. “நாராயணன்”, “பாற்கடலுள் துயின்ற பரமன்”, “ஓங்கி உலகளந்த உத்தமன்” என்று ஒவ்வொறு நாமமாய் பாடிக்கொண்டு இறுதியில் “வங்கக்கடல் கடைந்த மாதவனைக் கேசவனை” என்று முடிக்கிறாள் ஆண்டாள் நாச்சியார்.

ALSO READ:  ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

இந்த மாதத்தில் திருப்பாவை பாசுரங்களைப் பாடுவது மிகச்சிறந்த பலன்களைத் தரும். அதிகாலையில் வீதிகளில் ஆண்கள் பெண்கள் முதியவர்கள் சிறுவர்கள் என்று எல்லோரும் திருப்பாவைப் பாசுரங்களை பஜனையாகப் பாடிக்கொண்டு வீதிவலம் வருவார்கள்.

திருக்கோயிலில்களிலும் மடங்களிலும் வீடுகளிலும் அதிகாலை திருப்பாவை பாடி மகிழ்வர். மேலும் பல இடங்களில் திருப்பாவை பாசுரங்களின் அர்த்தத்தை விளக்கும் சொற்பொழிவுகள் நடைபெறும்.

சில இடங்களில் சிறுவர்களுக்கு திருப்பாவை ஒப்புவித்தல் போட்டி நடந்து பரிசுகளும் வழங்கப்படும். ஆக, மார்கழி மாதத்தில் எங்கும் திருப்பாவை, எதிலும் திருப்பாவை என்றபடி இருக்கும். இந்த மார்கழி மாதத்தில் நாமும் திருப்பாவையாகிற நாமசங்கீர்த்தனத்தை செய்து இன்புறுவோம்!

வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க போயபிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும், செப்பு!

எழுத்து: எம்.வி. மதுசூதனன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories