ட்ரெஸ்ஸிங் சென்ஸ்.. பற்றி மகா பெரியவா சொன்ன விளக்கம்!

kasi kanchi mutt - 2026

(‘Excuse me’ என்கிறார்கள்.Thanks’ என்கிறார்கள்; ‘Sorry’ என்கிறார்கள். இதெல்லாம் போற்றத்தக்க பண்பாடு. இதை விட்டுவிட்டு,கேவலம் டிரஸ்ஸை மட்டும் copy அடிக்கிறோம்.நமது கலாசாரப்படி டிரஸ் பண்ணிக்கணும். இல்லேன்னா….நாளடைவில் நமது பண்பாடுகளின் அஸ்திவாரமே போயிடும்….”–பெரியவா)

பணக்காரக் குடும்பம்; நவநாகரிகமான குடும்பம். பெண் அமெரிக்காவில் படிக்கிறாள். முழுக்கால் சட்டை,ஆண்களின் மேல் சட்டை அணிந்து கொண்டு மிடுக்காக வந்திருந்தாள்.

பக்கத்திலேயே ஒரு சாமானியக் குடும்பப் பெண்- பாவாடை,சட்டை,தாவணி என்று தென்னாட்டுப் பாரம்பரிய உடை.

பெரியவா அப்போது ஒரு புத்தகத்தைப் படித்து கொண்டிருந்தார்கள். இரு குடும்பத்தினரையும் பார்த்து விட்டு,சற்று நேரம் படித்துவிட்டுப்
புத்தகத்தை மூடி வைத்தார்கள்.

ஏழைப் பெண்ணைப் பார்த்து, ” நீ என்ன பண்றே? இதோ, இந்தப் பெண்ணைப் பாரு….காலேஜில் படிச்சுட்டு அமெரிக்கா போயிருக்கா…நீ என்ன பண்றதா,உத்தேசம்?” என்று கேட்டார்கள்.

“நானும் பி.ஏ.படிச்சிருக்கேன்…”

“அப்புறம்?”

“அப்பா – அம்மா சொல்கிறபடி, சிக்கனமாகக் குடும்பம் நடத்துவேன்.புடவை கட்டிப்பேன்; வேற டிரஸ் போட்டுக்க மாட்டேன்.நமக்குன்னு ஒரு கலாசாரம் இருக்குன்னு அப்பா அடிக்கடி சொல்லுவா..”

பளிச்சென்ற இந்த பதிலில்,பணக்காரப் பெண்ணிடம் ஒரு இன்பகரமான மாறுதல். தடாலென்று பெரியவாள் முன்பாக விழுந்தாள்.

“பெரியவா மன்னிக்கணும்.நான் இந்த டிரஸ்ஸில் இங்கே வந்தது,ஒரு அகங்காரத்தால்தான்.நான் அமெரிக்காவில் இருக்கேன்! என்று விளம்பரப்படுத்திக் கொள்ளும் உள்மன நோக்கம்…இனிமேல் இப்படிச் செய்ய மாட்டேன்”என்று கெஞ்சுகிறாப்போல் சொன்னாள்.

பெரியவா சொன்னார்கள்;

“மேல்நாட்டுக்காரர்களிடம் எவ்வளவோ நல்ல விஷயங்கள் இருக்கின்றன. அவைகளை ஏற்றுக் கொள்ளலாம்.’Excuse me’ என்கிறார்கள் .Thanks’ என்கிறார்கள்; ‘Sorry’ என்கிறார்கள். இதெல்லாம் போற்றத்தக்க பண்பாடு. இதை விட்டு விட்டு,கேவலம் டிரஸ்ஸை மட்டும் copy அடிக்கிறோம்.நமது கலாசாரப்படி டிரஸ் பண்ணிக்கணும். இல்லேன்னா…. நாளடைவில் நமது பண்பாடுகளின் அஸ்திவாரமே போயிடும்….”

இந்த உபதேசம் அந்தப் பெண்ணுக்கு மட்டுமல்ல; நம் எல்லோருக்கும் தானே?

சொன்னவர்-ஸ்ரீமடம் பாலு
தொகுப்பாளர்-கோதண்டராம சர்மா
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories