“புளிய மரத்து பிஸாசு”

“புளிய மரத்து பிஸாசு”

(பெரியவா சொன்ன பரிகாரமும் நிவர்த்தியும்)

2013-ம் வருட போஸ்ட்.18403116 1556446661067160 1497124748506696567 n 1 - 2026

வெளியூரிலிருந்து அடிக்கடி பெரியவாளை தர்சனம் பண்ண ஒரு அம்மா வருவாள். மடத்தில் எல்லாருக்கும் அந்த அம்மா மிகவும் பரிச்சியமாகி இருந்தாள். உள்ளே நுழையும் போது எதிரில் வந்த பாரிஷதரிடம் அந்த அம்மா சொன்னாள் …..

“பெரியவாட்ட முக்யமா ஒரு கேள்வி கேக்கணும்”

“என்ன கேள்வி?”

“எங்க தோப்புல புளியமரம் நாலு வருஷமா காய்க்கவேயில்லே! என்ன காரணம்ன்னு பெரியவாளை கேக்கணும்”

பாரிஷதருக்கு கொஞ்சம் கோபமே வந்துவிட்டது

. “என்ன மாமி இது? பெரியவாட்ட ஆன்மீக விஷயமா, பூஜை புனஸ்காரம் பத்தி கேக்கலாம்…. ஒங்காத்து புளியமரம் காய்க்கலைன்னா….அவர் என்ன பண்ணுவார்? இதைப்பத்தி எல்லாம் பேசாதீங்கோ!” என்று கொஞ்சம் கடிந்து சொன்னார்.

இது போதாதா நம் லீலா புருஷருக்கு?

பக்கத்தில் நின்று கொண்டிருந்த மற்றொரு பாரிஷதரிடம், “அந்த அம்மா என்ன சொல்றா கேளு…” என்றார்.

அவர் வந்து விஜாரித்து விட்டு, “அவா தோப்புல புளிய மரமெல்லாம் நாலு வர்ஷமா காய்க்கவே இல்லியாம்! …”

“புளிய மரத்து பிஸாசு…ன்னு கேள்விப்பட்டிருக்காளா..ன்னு கேட்டுண்டு வா!”

“கேள்விப்பட்டிருக்கேன் பெரியவா….தோப்பு புளியமரங்கள்ள பிஸாசு இருக்கறதா ஊர்க்காரால்லாம் சொல்லுவா”

“ஒன்னோட குடும்பத்துல முன்னாடி ஏதோ தலைமுறைல ஒரு பொம்மனாட்டி, கெணத்துல விழுந்து தற்கொலை பண்ணிண்டா ….ஒனக்கு அந்த விவரம் தெரியுமோ?”

“கேள்விப்பட்டிருக்கேன்…என் மாமனாரோட அப்பா, தன் மூத்த சம்ஸாரத்தை ரொம்பவே கொடுமைப்படுத்தினாராம். அவரோட ஹிம்ஸை பொறுக்காம, அவா கெணத்துல குதிச்சு உசிரை விட்டுட்டாளாம் !..”

“நீ, ஆனந்ததாண்டவபுரம் ஐயங்காரை போயி பாத்து, அவர் சொல்ற பரிஹாரங்களை பண்ணு! அவர் நல்ல மாந்த்ரீகர்! பரிஹாரம் பண்ணு! அப்றம் ராமேஸ்வரத்ல தில ஹோமம் பண்ணு!..”

பெரியவா சொன்னதை அந்த அம்மா பண்ணி முடித்தாள். புளிய மரங்கள் நன்றாக காய்த்து குலுங்கத் தொடங்கின. முதல் உலுக்கலில் கிடைத்த புளியம்பழங்கள், ஒரு கூடை முழுக்க கொண்டு வந்து பெரியவாளிடம் சமர்ப்பித்தாள். கையைத் தூக்கி ஆசீர்வாதம் பண்ணினார்.

“பெரியவாளோட அநுக்ரஹத்தால என்னோட மாமியாரோட மாமியாருக்கு ஸத்கதி கெடைச்சுது! ” கண்களில் கண்ணீர் மல்க நமஸ்கரித்தாள்.

“இந்த மாதிரி துர்மரணங்கள் சம்பவிச்சா…அவா ஆவியா அலைஞ்சு தவிப்பா! அதுக்கான பரிஹாரங்களை நாம பண்ணிட்டோமன்னா, தவிக்கற அந்த உசிர் மேல் லோகத்துக்கு போய்டறது…” என்றார் பெரியவா

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

Entertainment News

Popular Categories