December 5, 2025, 5:57 PM
27.9 C
Chennai

“அசையாது நின்ற ஸ்ரீமடத்து பயில்வானும் .ஓசையின்றி ஓடிய வெளியூர் பயில்வானும்”

“அசையாது நின்ற ஸ்ரீமடத்து பயில்வானும் .ஓசையின்றி ஓடிய வெளியூர் பயில்வானும்”

(ஒரு பயில்வான் மிகவும் வீறாப்புடன் மடத்துக்கு வரப் போகிறான் என்பது பெரியவாளுக்கு எப்படித் தெரிந்தது?)

(இது அக்டோபர் 2011 பதிவு)17352237 1601442589873347 7280143330772355007 n 3 - 2025

ஒரு சமயம் பயில்வான் ஒருவர் காஞ்சிப் பெரியவரைத் தரிசிக்க வரவேண்டும் என்ற தன்னுடைய விருப்பத்தை தெரிவித்திருந்தார்.

ஒரு பிடி எள்ளை அவரிடம் கொடுத்தால், அதை எண்ணெய்யாக்கி விடும் அளவுக்கு பலசாலி.

காஞ்சிப் பெரியவரின் முன்னிலையில் தன் திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இருந்தது. தன்னை விட வேறு திறமையான பயில்வான் இல்லை என்று அவர் கர்வமும் கொண்டிருந்தார்.

விஷயத்தை அறிந்த காஞ்சிப் பெரியவர் அவருக்கு தகுந்த பாடம் புகட்ட எண்ணினார்.

மணக்கால் நாராயணன் சாஸ்திரிகள் என்ற பக்தர் காஞ்சி மடத்திற்கு அடிக்கடி வந்து சொல்லக் கூடியவர். நல்ல உடற்கட்டும், உயரமும் கொண்ட சாஸ்திரிகள் பார்ப்பதற்கு பயில்வான் போலவே காட்சி தருவார்.

அவரை அழைத்த சுவாமிகள், “இன்று முழுவதும் ஸ்ரீமடத்து வாசலிலேயே நிற்க வேண்டும்,” என்று சாஸ்திரிகளுக்கு உத்தரவிட்டார்.

பெரியவரின் உத்தரவைக் கேட்ட சாஸ்திரிகளும், மற்ற மடத்து தொண்டர்களும் புரியாமல் விழித்தனர். இருந்தாலும், பெரியவரின் கட்டளைக்கு பணிந்து அன்று முழுவதும் சாஸ்திரிகள் வாசலிலேயே கம்பீரமாக நின்று கொண்டிருந்தார்.

அன்றைய தினம் வருவதாகச் சொல்லியிருந்த பயில்வான் மடத்திற்கு வரவே இல்லை. மாலை நேரமும் வந்து விட்டது. பயில்வானின் நண்பர் ஒருவர் மெதுவாக மடத்திற்குள் நுழைந்தார்.

அவர் மடத்திலிருந்த சிஷ்யர்களிடம், “வேத பண்டிதர்கள் மட்டும் தான் மடத்தில் இருப்பார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், மடத்து வாசலிலே பயில்வான்களும் இருப்பார்கள் என்பதை இன்று நேரிலேயே பார்க்கிறேன்,” என்றவர், இன்னொரு தகவலையும் சிஷ்யர்களிடம் சொன்னார்.

“இன்று பெரியவரைப் பார்ப்பதற்கு வருவதாகச் சொன்னாரே பயில்வான்! அவரும் நானும் ஒன்றாகத்தான் வந்தோம். மடத்து வாசலுக்கு வந்ததும், அங்கே ஒரு பயில்வான் நிற்பதைப் பார்த்தார். என்ன நினைத்தாரோ தெரியவில்லை. என்னை மட்டும் உள்ளே அனுப்பி விட்டு அவர் ஏதோ ஒரு பயத்துடன் ஓடியே விட்டார்,” என்றார்.

இதனைக் கேட்ட அனைவரும் சிரித்து மகிழ்ந்ததோடு, சுவாமிகளிடமும் இதைத் தெரிவித்தனர். அன்றுமுதல் மணக்கால் நாராயணன் சாஸ்திரிகளுக்கு “ஸ்ரீமடத்து பயில்வான் ‘ என்ற பெயரே நிலைத்துவிட்டது.

ஒரு பயில்வான் மிகவும் வீறாப்புடன் மடத்துக்கு வரப் போகிறான் என்பது பெரியவாளுக்கு எப்படித் தெரிந்தது?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories