December 6, 2025, 1:05 PM
29 C
Chennai

ஒரு ரூபாய்க்கு நெய் வாங்கிக் கொண்டு  பண்டரிபுரத்துக்கு வா’ (கனவில் தோன்றி செய்த ஒரு அற்புதம்)

‘ஒரு ரூபாய்க்கு நெய் வாங்கிக் கொண்டு  பண்டரிபுரத்துக்கு வா’

(கனவில் தோன்றி செய்த ஒரு அற்புதம்)(சர்வ வல்லமை படைத்த அந்த மகான் சகலத்தையும் அறிந்து, உதவவேண்டிய பக்தர்களுக்கு அவ்வப்போது தவறாமல் உதவி வருகிறார்)

கட்டுரை-ரா.வேங்கடசாமி61824767 699403060494343 2086571481210290176 n 1 - 2025
காஞ்சி மகானின் கருணை நிழலில்- புத்தகத்திலிருந்து
புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்

மகா பெரியவர் 1981-ஆம் வருடம் பண்டரிபுரத்தில் முகாமிட்டிருந்தார். வரிசையாக பக்தர்கள் மகானை தரிசித்துக்கொண்டு வரும்போது, கூட்டத்தின் நடுவே வடநாட்டைச் சேர்ந்த சேட் ஒருவர்,பெரியவாளின் முன் ஒரு டின் நிறைய நெய் கொண்டுவந்து வைத்தார்.

அதைப் பார்த்த மகான்,”ஒரு ரூபாய்…ஒரு ரூபாய்…” என்று கூறினார். அங்கு கூடியிருந்த மக்களுக்கு மகான் எதற்காக அப்படிக் கூறுகிறார் என்று தெரியவில்லை. அவர் நிஜமாகவே ஒரு ரூபாய் கேட்பதாக நினைத்துக்கொண்டு,அங்கிருந்தவர்கள் ஆளுக்கு ஒரு ரூபாய் வீதம் பணத்தை எடுத்தனர்.

மகான், தன் அருகில் இருந்த மடத்துச் சிப்பந்தியிடம் சொன்னார்; “அந்த சேட்டிடம் ஒரு ரூபாய்க்குத்தானே நெய் வாங்கி வரச்சொன்னேன் …ஏன் ஒரு டின் நெய் வாங்கி வந்தார் என்று கேள்!”

எல்லோரும் இதைக்கேட்டு வியந்து போனார்கள்.

பெரியவர் எப்போது இந்த சேட்டிடம் ஒரு ரூபாய்க்கு நெய் வாங்கிவரச் சொல்லி இருக்கக் கூடும்?” என்று விளங்காமல் விழித்தனர்.

இதைப் புரிந்துகொண்ட சேட், நிதானமாக பதில் சொன்னார்.

“என் மகளை யாரோ கடத்திக்கொண்டு போய்விட்டார்கள் நான் கவலைப்பட்டுக் கொண்டிருந்தபோது,’ஸ்வாமிஜி’ என் கனவில் தோன்றி, ‘ஒரு ரூபாய்க்கு நெய் வாங்கிக் கொண்டு பண்டரிபுரத்துக்கு வா,உன் மகள் சேதமின்றி வீடு திரும்புவாள்’ என்று கூறினார்.

சொன்னபடியே, மறுநாள் என் பெண் பத்திரமாக  வீட்டுக்குத் திரும்பிவிட்டாள்.அதான் பெரியவா சொன்ன ஒரு ரூபாய் நெய்க்கு பதிலாக ஒரு டின் நெய் எடுத்துக் கொண்டு வந்திருக்கிறேன்” என்று அவர் சொன்னதைக் கேட்ட பக்தர்கள் அனைவரும் வியப்பு அடைந்தனர்.

சேட்டுக்கு கனவில் தோன்றி, தான் சொன்னது வாஸ்தவம்தான் என்கிற உண்மையை அந்த மகான் எல்லோருக்கும் புரிய வைத்துவிட்டார் அல்லவா?

சர்வ வல்லமை படைத்த அந்த மகான் சகலத்தையும் அறிந்து, உதவவேண்டிய பக்தர்களுக்கு அவ்வப்போது தவறாமல் உதவி வருகிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories