ஒரு ரூபாய்க்கு நெய் வாங்கிக் கொண்டு  பண்டரிபுரத்துக்கு வா’ (கனவில் தோன்றி செய்த ஒரு அற்புதம்)

‘ஒரு ரூபாய்க்கு நெய் வாங்கிக் கொண்டு  பண்டரிபுரத்துக்கு வா’

(கனவில் தோன்றி செய்த ஒரு அற்புதம்)(சர்வ வல்லமை படைத்த அந்த மகான் சகலத்தையும் அறிந்து, உதவவேண்டிய பக்தர்களுக்கு அவ்வப்போது தவறாமல் உதவி வருகிறார்)

கட்டுரை-ரா.வேங்கடசாமி61824767 699403060494343 2086571481210290176 n 1 - 2026
காஞ்சி மகானின் கருணை நிழலில்- புத்தகத்திலிருந்து
புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்

மகா பெரியவர் 1981-ஆம் வருடம் பண்டரிபுரத்தில் முகாமிட்டிருந்தார். வரிசையாக பக்தர்கள் மகானை தரிசித்துக்கொண்டு வரும்போது, கூட்டத்தின் நடுவே வடநாட்டைச் சேர்ந்த சேட் ஒருவர்,பெரியவாளின் முன் ஒரு டின் நிறைய நெய் கொண்டுவந்து வைத்தார்.

அதைப் பார்த்த மகான்,”ஒரு ரூபாய்…ஒரு ரூபாய்…” என்று கூறினார். அங்கு கூடியிருந்த மக்களுக்கு மகான் எதற்காக அப்படிக் கூறுகிறார் என்று தெரியவில்லை. அவர் நிஜமாகவே ஒரு ரூபாய் கேட்பதாக நினைத்துக்கொண்டு,அங்கிருந்தவர்கள் ஆளுக்கு ஒரு ரூபாய் வீதம் பணத்தை எடுத்தனர்.

மகான், தன் அருகில் இருந்த மடத்துச் சிப்பந்தியிடம் சொன்னார்; “அந்த சேட்டிடம் ஒரு ரூபாய்க்குத்தானே நெய் வாங்கி வரச்சொன்னேன் …ஏன் ஒரு டின் நெய் வாங்கி வந்தார் என்று கேள்!”

ALSO READ:  ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!

எல்லோரும் இதைக்கேட்டு வியந்து போனார்கள்.

பெரியவர் எப்போது இந்த சேட்டிடம் ஒரு ரூபாய்க்கு நெய் வாங்கிவரச் சொல்லி இருக்கக் கூடும்?” என்று விளங்காமல் விழித்தனர்.

இதைப் புரிந்துகொண்ட சேட், நிதானமாக பதில் சொன்னார்.

“என் மகளை யாரோ கடத்திக்கொண்டு போய்விட்டார்கள் நான் கவலைப்பட்டுக் கொண்டிருந்தபோது,’ஸ்வாமிஜி’ என் கனவில் தோன்றி, ‘ஒரு ரூபாய்க்கு நெய் வாங்கிக் கொண்டு பண்டரிபுரத்துக்கு வா,உன் மகள் சேதமின்றி வீடு திரும்புவாள்’ என்று கூறினார்.

சொன்னபடியே, மறுநாள் என் பெண் பத்திரமாக  வீட்டுக்குத் திரும்பிவிட்டாள்.அதான் பெரியவா சொன்ன ஒரு ரூபாய் நெய்க்கு பதிலாக ஒரு டின் நெய் எடுத்துக் கொண்டு வந்திருக்கிறேன்” என்று அவர் சொன்னதைக் கேட்ட பக்தர்கள் அனைவரும் வியப்பு அடைந்தனர்.

சேட்டுக்கு கனவில் தோன்றி, தான் சொன்னது வாஸ்தவம்தான் என்கிற உண்மையை அந்த மகான் எல்லோருக்கும் புரிய வைத்துவிட்டார் அல்லவா?

சர்வ வல்லமை படைத்த அந்த மகான் சகலத்தையும் அறிந்து, உதவவேண்டிய பக்தர்களுக்கு அவ்வப்போது தவறாமல் உதவி வருகிறார்.

ALSO READ:  பஞ்சாங்கம் ஜூன் 13 - சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

Topics

பஞ்சாங்கம் ஜூன் 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories