“லீடர் சொல்கிறபடி நடக்கும் குரங்குகள்,யானை”

10482143 599228513527816 46027082804070919 n - 2026

“ஆறறிவு படைத்த மனிதர்கள்தான் குரு
சொல்கிறபடி நடப்பதில்லை! என்னைப் பார்த்து,
நீங்களெல்லாம் ஆச்சார்யாள்,பெரியவாள் என்றெல்லாம்
சொல்கிறீர்கள். ஆனால், நான் சொல்வதை உங்களால்
செய்யமுடிகிறதில்லை!”–பெரியவா பக்தர்களிடம்.

(லீடர் சொல்கிறபடி நடக்கும் குரங்குகள்,யானை
மற்றும் கட்டெறும்பு,காக்கை-உதாரணம் காட்டி)

சொன்னவர்-ஸ்ரீமடம் பாலு
தொகுப்பாளர்-கோதண்டராம சர்மா
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

பெரியவாள் பக்தர்களுக்குத் தரிசனம் கொடுத்துக்
கொண்டிருந்தார்கள்.

எதிரே, ஒரு பெரிய மரம்.தடிமனான குரங்கு ஒன்று
வந்து மரத்தில் ஏறியது.பின், இருபது – முப்பது
குரங்குகள் அந்த லீடர் குரங்கைத் தொடர்ந்து
மரத்தில் ஏறின.

பெரியவாள், ஒரு கூடை மாம்பழத்தை மரத்தடியில்
போடச் சொன்னார்கள்.

லீடர் குரங்கு என்ன உத்தரவு எப்படிப் போட்டதோ
தெரியவில்லை! ஆனால், மற்றக் குரங்குகள்
ஒவ்வொன்றாக வந்து ஒரு பழத்தை எடுத்துக்கொண்டு
மேலே ஏறிச் சென்றன. லீடர் குரங்கு மட்டும் ஒரு
பழத்தைக் கூடத் தொடவில்லை.

பெரியவாள் சொன்னார்கள்;

“குரங்குகள் போன்ற மிருகங்களுக்குக் கூட ஒரு
discipline இருக்கு!லீடர் குரங்கு சொல்கிறபடி நடக்கின்றன

ALSO READ:  ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!

“காட்டில், யானைகளுக்கு ஒரு தலைமை யானை
இருக்கும். அந்த லீடர் யானையை follow பண்ணித்தான்
மற்ற யானைகள் செல்லும்.

“ஒரு கட்டெறும்பு செத்துப்போனால், மற்ற
கட்டெறும்புகள் அதை இழுத்துச் செல்லும்.

“ஒரு காக்கை இறந்துபோனால், மற்ற காக்கைகள்
மரத்தில் உட்கார்ந்துகொண்டு துக்கமாய் கதறும்.

“ஆனால், ஆறறிவு படைத்த மனிதர்கள்தான் குரு
சொல்கிறபடி நடப்பதில்லை! என்னைப் பார்த்து,
நீங்களெல்லாம் ஆச்சார்யாள்,பெரியவாள் என்றெல்லாம்
சொல்கிறீர்கள். ஆனால், நான் சொல்வதை உங்களால்
செய்யமுடிகிறதில்லை!”

கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்த பக்தர்கள் ஒரே குரலாக,
“பெரியவா என்ன உத்தரவு போட்டாலும் செய்கிறோம்”
என்று பக்தியோடு பதிலளித்தார்கள்.

“சரி,காலையில் இரண்டு நிமிஷமும், சாயங்காலம்
இரண்டு நிமிஷமும் எனக்காக ஒதுக்குங்கள்,இருபத்துநாலு
மணி நேரத்தில், நாலு நிமிஷம்தான் கேட்கிறேன்.

“காலையில்,இரண்டு நிமிஷம் ‘ ராம,ராம’ என்று
சொல்லுங்கோ;சாயங்காலம்,’சிவ,சிவ’ன்னு சொல்லுங்கோ”

“அப்படியே செய்கிறோம்” என்று சுமார் நூறு பேர்கள்
தெரிவித்துக் கொண்டார்கள்.

அமளி அடங்கியதும், பெரியவாள் அருகிலிருந்த
தொண்டர்களிடம், “பத்துப் பனிரெண்டு பேர்களாவது
சொன்ன சொல்லைக் காப்பாத்துவா” என்றார்கள்.

ALSO READ:  ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

அந்த, யாரோ பத்துப் பனிரெண்டு புண்யாத்மாக்களை
உருவாக்குவதற்காகத்தான், ஆழமான கருத்துடன்,
அரைமணி லெக்சர்!

குரங்கு,காட்டு யானை,கட்டெறும்பு,காக்கை -நமக்கு
நல்ல வழிகாட்டிகள்;அவர்களை(அவைகளை)யாவது
follow பண்ணலாம்தானே?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories