“ஜான்மன்னரை நேரடியாக சுவாமி நாதனின் நடிப்பில் கண்டேன் “-பிஷப்

Published:

10991144 10203986140276638 1513698117885524633 n - 2026

“ஜான்மன்னரை நேரடியாக சுவாமி நாதனின் நடிப்பில் கண்டேன் “-பிஷப்

(முதல்பரிசை தட்டிச் சென்ற பெரியவா)

(பெரியவா ஜெயந்தி-08-06-2017-இளமைப்பருவம்
சில நாட்கள் தொடரும்) இன்று போனஸ் இரு கவிதைகள்.

[தினமலர் கட்டுரையில் ஒரு பகுதி-25-12-2012)-“பைபிளும் பரமாச்சார்யாரும்”

சுவாமிநாதன் எட்டுவயது வரை தந்தையிடமே கல்வி கற்றார். பின் திண்டிவனம் ஆற்காடு
அமெரிக்க மிஷன் உயர் நிலைப்பள்ளியில் ஏழாம் வகுப்பில் சேர்ந்தார்.
இப்பள்ளியில் கண்டிப்பும் ஒழுங்கும் நல்ல முறையில் இருந்தன.
அறிவுக்கூர்மையுடன் நன்கு ஆர்வத்துடன் படித்து வந்தார். ஆண்டு தோறும் பைபிள்
ஒப்புவித்தல் போட்டி நடப்பது வழக்கம். இப்போட்டியில் எப்படியும் பரிசு பெற்று
விடுவது என்ற உறுதியுடன் சுவாமிநாதன் படித்து முதல்பரிசும் பெற்றார்.இவர்
வெற்றி பெற்றது அனைவருக்கும் ஆச்சரியத்தை தந்தது. எல்லா ஆசிரியர்களும்
சுவாமிநாதனைப் பாராட்டி மகிழ்ந்தனர்.

ஒருசமயம் அப்பள்ளியை ஆய்வு செய்ய உதவிக்கல்வி அதிகாரி மஞ்சக்குப்பம்
சிங்காரவேலு முதலியார் வந்திருந்தார். கண்டிப்பு மிக்க அவர், மாணவர்களின்
கல்வித்திறனை அறிய சிக்கலான பல கேள்விகளைக் கேட்டார். சுவாமிநாதனின் தெளிவான
பேச்சு அதிகாரியின் கவனத்தை ஈர்த்தது. நிச்சயம் இந்த மாணவர் எதிர்காலத்தில்
உயர்ந்தநிலையை அடைவார் என்று பாராட்டிச் சென்றார்.

ALSO READ:  கட்டுப்பாடற்ற நடத்தை பண்பாடு ஆகாது!

சுவாமிநாதன் அப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது பள்ளியின் ஆண்டு
விழாவில் ஷேக்ஸ்பியர் எழுதிய ஜான்மன்னர் என்ற நாடகத்தை நடத்த பள்ளி நிர்வாகம்
ஏற்பாடு செய்திருந்தது. நாடகத்தின் முக்கிய கதாபாத்திரமான ஆர்தர் இளவரசர்
வேடத்தில் நடிப்பதற்கு சுவாமிநாதனைத் தேர்ந்தெடுத்தார்

தலைமையாசிரியர். நாடகத்தில் நடிப்பதற்கு தன்னைத் தேர்ந்தெடுத்ததை அறிந்து
சுவாமி நாதன் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. சுவாமிநாதனின் பெற்றோருக்கோ
இதில் உடன்பாடில்லை. ஆனாலும், தன் பெற்றோரைச் சம்மதிக்க வைத்தார் சுவாமிநாதன்.
அவரது விருப்பப்படியே பெற்றோர் நாடகஉடைகளை தைக்க ஏற்பாடு செய்தனர். இரண்டே
நாட்களில் ஜான் மன்னருக்குரிய வசனங்களை மனப்பாடம் செய்து, அருமையாக நடித்தார்.
நாடகத்தைக் கண்ட தலைமை விருந்தினர் பிஷப், சுவாமிநாதனைப் பாராட்டி
மகிழ்ந்தார். இன்று ஜான்மன்னரை நேரடியாக சுவாமி நாதனின் நடிப்பில் கண்டேன்
என்று சொல்லி முதல்பரிசை வழங்கினார். அந்த சுவாமிநாதனே காஞ்சி காமகோடி 68வது
பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சுவாமிகளாகி நமக்கு அருள்பாலித்தார்.

மெம்பர்களுக்கு ஒரு போனஸ்–சுப்பு ஆறுமுகம் எழுதிய இரு கவிதைகள்

ALSO READ:  கட்டுப்பாடற்ற நடத்தை பண்பாடு ஆகாது!

(தாலாட்டுப் பாடல்-பெரியவா மீது)

ஓங்காரம் குழந்தை என்றே உன்னுருவில் வந்ததுவோ!

ஆங்கார சக்தியதே ஆசிமொழி தந்தனளோ!

காமதேனு பாலூட்ட கலைமகளே தாலாட்ட

ஆகமங்கள் சீராட்ட அன்னையின் கை தொட்டில் ஆட்ட

காமாட்சி காதில் வந்து கதைகள் ரசிக்கச் சொல்லினளோ!

கலகல சிரிப்பினில் அன்னை கானமழை பொழிந்தனளோ!

உதைக்கும் பாதங்களை உலகமே வணங்குமல்லோ!

காத்திருக்கும் நாளை அல்லோ காமகோடி பீடமல்லோ!

அனுஷம் நட்சத்திரமோ! அவதாரம் சரித்திரமோ!

ஆடல் அரசன் – திரு ஆடல்களில் நீயும்ஒன்றோ!

ஆதி சங்கரர் அருளின் சேதியென்ன கொணர்ந்தாயோ!

ஆராரோ! ஆரிரரோ! ஆரிரரோ! ஆராரோ!

தட்சிணா மூர்த்தியோ! சனாதனக் கீர்த்தியோ!

தருமத்தின் குறைகள் கண்டு தான் எடுத்த அவதாரமோ!

ஆராரோ! ஆரிரரோ! ஆரிரரோ! ஆராரோ!”

இப்படியாக குழந்தை சுவாமி நாதன் (மஹா பெரியவாளின் பூர்வாசிரமப் பெயர்)
தொட்டிலில் துயில் கொள்ளும் அழகுக்கு ஒரு தாலாட்டுப் பாட்டுப் போட்டிருந்தேன்.
இதைக் கேட்டதும், மஹா பெரியவாள், என்னைத் தொட்டிலில் போட்டு, தாலாட் டுப் பாடி
தூங்கப் பண்ணிட்டியே! ” என்று சொல்லிச் சிரித்தார்.

ALSO READ:  கட்டுப்பாடற்ற நடத்தை பண்பாடு ஆகாது!

பெரியவாளின் பால பருவத்தைப் பற்றிச் சொல்லும்போது,

நடித்தாரே! நாடகம் தனில் அவர் நடித்தாரே!

உலக நாடகம் நடத்திட வந்தவர் நடித்தாரே!

என்று பல்லவியும், சரணமாக

கடவுள் கொடுத்தது மானிட வேடம்!

கல்விக்கூடத்தில் ‘கிங் ஜான்’ வேடம்!

இன்றிவர் படித்தது இங்கிலீஷ் பாடம்!

எதிர்பார்த்திருக்குது காமகோடி பீடம்!

(நடித்தார்)

என்று சொன்னேன். உடனே மஹா பெரியவா, இதெல்லாம் நோக்கு எங்க கெடச்சுது?” என்று
கேட்டார். பெரியவா பத்தின புஸ்தகத்தை படிச்சு தெரிஞ்சுக்கிட்டேன்” என்று
சொன்னேன்.-சுப்பு ஆறுமுகம்

Related articles

Recent articles

spot_img