பார்வையில் ஆயிரம் அர்த்தங்கள்

kanchi periyava - 2026

“பெரியவா அனுக்ரகத்தால் நாலாயிரம் ரூபாய் தட்சணையாக
வந்தது. நீங்கள் கோயிலுக்கு வந்ததால் ஏராளமான பக்தர்கள்
வந்து கூடினார்கள் இல்லையா? அதனால் வந்தது!”-அர்ச்சகர்

(ஏழை அர்ச்சகருக்குக் கருணை புரிய விரும்பிய பெரியவாளின்
தங்கமான மனது)

ஜூன்24-2017-தினமலர்-பார்வையில் ஆயிரம் அர்த்தங்கள்-திருப்பூர் கிருஷ்ணன்.
தட்டச்சு-வரகூரான் நாரயணன்.

காஞ்சீபுரம் ஏகாம்பரேஸ்வரர் சன்னதித் தெருவில்
ஜுரஹரேஸ்வரர் என்ற பெயரில் சிவன் கோயில் உண்டு.
யாருக்காவது ஜுரம் வந்தால் இங்குள்ள சிவனிடம்
பிரார்த்தனை செய்துவிட்டு சிவனே என்றிருப்பார்கள்.
ஜுரம் குணமானதும் சுவாமிக்கு மிளகு சாதம் நிவேதனம்
செய்வார்கள்.

ஒரு சிவராத்திரி…எப்போதும் சிவராத்திரியன்று
காஞ்சி மகாபெரியவர், நான்கு கால பூஜை செய்வது
வழக்கம்.அவரைத் தரிசிக்கவும், பூஜையைப் பார்க்கவும்
இரவில் கூட்டம் அலை மோதும்.அன்று நள்ளிரவு
11 மணி அளவில், பெரியவர் ஜுரஹரேஸ்வரர்
கோயிலுக்குப் புறப்பட்டார்.

அவரிடம் அளவற்ற பக்தி கொண்ட ஒருவர்
தவிப்போடு கூறினார்.

“இன்று முழுவதும் நீங்கள் உபவாசம்.(பட்டினி)
இரவெல்லாம் கண்விழித்து பூஜை செய்த களைப்பு
வேறு.மடத்திலேயே இத்தனை நேரம் சிவபூஜை தானே
செய்தீர்கள். உடல் தளர்ந்திருக்கும் நேரத்தில் நடந்து
போய் ஜுரஹரேஸ்வரரைத் தரிசிக்கத்தான் வேண்டுமா?
ஓய்வெடுங்களேன்!”

பக்தரைக் கனிவோடு பார்த்த பெரியவர்,பதில் கூறவில்லை.
நடந்தே கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தார்.
இதைக்கண்டு அங்கு ஏராளமானோர் குழுவினர்.
எல்லோருக்கும் ஆசி கூறிய பெரியவர் மடத்திற்கு
வந்து சேர்ந்தார்.

‘மறுநாள்’…..காலை பிரசாதத்துடன், பெரியவரைப் பார்க்க
வந்தார் வறுமையால் மெலிந்த தோற்றமுடைய
ஜுரஹரேஸ்வரர் கோயில் அர்ச்சகர்.

தன்னைக் கோயிலுக்குச் செல்ல வேண்டாமே என வேண்டிய
பக்தர் அருகே இருப்பதைக் கண்ட பெரியவர்,அர்ச்சகரிடம்,
“சிவராத்திரிக்கு என்ன வருமானம் வந்தது?” என்றார்.

“பெரியவா அனுக்ரகத்தால் நாலாயிரம் ரூபாய் தட்சணையாக
வந்தது. நீங்கள் கோயிலுக்கு வந்ததால் ஏராளமான பக்தர்கள்
வந்து கூடினார்கள் இல்லையா? அதனால் வந்தது!”-அர்ச்சகர்.

“இல்லாவிட்டால் சுமாராக எவ்வளவு வரும்?”-பெரியவா

“என்ன, ஒரு இருநூறு ரூபாய் தட்சணை கிடைத்தாலே பெரிது”.

அந்த ஏழை அர்ச்சகர் முகத்தில் நல்ல வருமானம் கிடைத்தது
பற்றிய மகிழ்ச்சி தென்பட்டது.

உடனே பெரியவர் அந்த பக்தரை அர்த்தத்தோடு ஒரு பார்வை
பார்த்தார்.அந்தப் பார்வை ஆயிரம் விஷயங்களப் பேசிற்று.

ஏழை அர்ச்சகருக்குக் கருணை புரிய விரும்பிய பெரியவாளின்
தங்கமான மனதை புரிந்து கொண்ட பக்தரின் விழிகளில்
கண்ணீர் திரையிட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories