“நாய்க்குப் போட்டாச்சா?” (நாய்க்கும் ஈந்த நாயகராக நமது சாஸ்திரக் காவலர்)

246400 479182102136836 1433845875 n 4 - 2026

“நாய்க்குப் போட்டாச்சா?”
(நாய்க்கும் ஈந்த நாயகராக நமது சாஸ்திரக் காவலர்)

(பெரியவாள் தமது அருள் ஆஃபீஸை மீண்டும்
தொடங்கும் போது கேட்கும் முதற் கேள்வி.——r”நாய்க்குப் போட்டாச்சா”
என்பதுதான்.)

கட்டுரையாளர்;ரா.கணபதி.
(மஹா பெரியவாள் விருந்து)
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.

நாயைத் தாழ் பிறவியாகவே சாஸ்திரம் கூறும்.
ஆனால் நாய்க்கும் ஈந்த நாயகராக நமது
சாஸ்திரக் காவலர் இருக்கிறார்.

1927-ம் வருஷத்தில் ஒரு நாய் மடத்து முகாமுக்குத்
தானாகவே வந்து காவல் காக்கத் தொடங்கியது.
தமது பிக்ஷை முடிந்தவுடன் அதற்கு ஆஹாரம்
போடுமாறு பெரியவாள் ஆக்ஞாபித்தார்.

விந்தையாக மடத்து பிக்ஷை சேஷத்தை உண்ண
ஆரம்பித்தபின் அது வேறெவர் எது கொடுத்தாலும்
உண்ண மறுத்தது.

ஸ்ரீ மஹா பெரியவாள் பல்லக்கில் ஊர் ஊராகச்
சென்று கொண்டிருந்த காலத்தில் அந்த நாய்,
ஒன்று அந்தப் பல்லக்கின் கீழேயே போகும்;
அல்லது யானையின் தூண் போன்ற நாலு
கால்களுக்கு உள்ளாகவே போகும்.பல்லக்கு
நிறுத்தப்பட்டவுடன் எட்டத்திற்கு ஓடிச் சென்று
பெரியவாள் இறங்கிச் செல்வதை அங்கிருந்தே
கண்குளிரக்கண்டு வாலை ஆட்டும்.

ஒரு முறை அதற்கு வெறிபிடித்து விட்டதாகச்
சிப்பந்திகள் எண்ணினர். சேவகன் ஒருவனிடம்
அதன் கண்ணைக் கட்டி நாற்பது கிலோமீட்டர்
தள்ளியிருந்த ஒரு கிராமத்தில் கயிற்றால்
பிணித்து விட்டுத் திரும்பி வருமாறு பணித்தனர்.

அப்படியே அச் சேவகன் செய்து திரும்பினான்.

அவன் திரும்பும் முன்னரே பைரவனாரும்
திரும்பியிருந்தார்!. அவருக்கு வெறியில்லை
என்று தெரிந்தது.

அன்றிலிருந்து மஹா பெரியவாளைத்
தரிசிக்காமல் உண்பதில்லை என்று அந்த நாய்
உயிர் பிரியம் வரையில் விரதம் காத்தது!

அக்காலத்தில் பிக்ஷை முடித்தபின் சிறிது
சிரம பரிஹாரம் செய்து கொண்டு பெரியவாள்
தமது அருள் ஆஃபீஸை மீண்டும் தொடங்கும்
போது கேட்கும் முதற் கேள்வி.————-
“நாய்க்குப் போட்டாச்சா” என்பதுதான்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories