“நாய்க்குப் போட்டாச்சா?” (நாய்க்கும் ஈந்த நாயகராக நமது சாஸ்திரக் காவலர்)

246400 479182102136836 1433845875 n 4 - 2026

“நாய்க்குப் போட்டாச்சா?”
(நாய்க்கும் ஈந்த நாயகராக நமது சாஸ்திரக் காவலர்)

(பெரியவாள் தமது அருள் ஆஃபீஸை மீண்டும்
தொடங்கும் போது கேட்கும் முதற் கேள்வி.——r”நாய்க்குப் போட்டாச்சா”
என்பதுதான்.)

கட்டுரையாளர்;ரா.கணபதி.
(மஹா பெரியவாள் விருந்து)
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.

நாயைத் தாழ் பிறவியாகவே சாஸ்திரம் கூறும்.
ஆனால் நாய்க்கும் ஈந்த நாயகராக நமது
சாஸ்திரக் காவலர் இருக்கிறார்.

1927-ம் வருஷத்தில் ஒரு நாய் மடத்து முகாமுக்குத்
தானாகவே வந்து காவல் காக்கத் தொடங்கியது.
தமது பிக்ஷை முடிந்தவுடன் அதற்கு ஆஹாரம்
போடுமாறு பெரியவாள் ஆக்ஞாபித்தார்.

விந்தையாக மடத்து பிக்ஷை சேஷத்தை உண்ண
ஆரம்பித்தபின் அது வேறெவர் எது கொடுத்தாலும்
உண்ண மறுத்தது.

ஸ்ரீ மஹா பெரியவாள் பல்லக்கில் ஊர் ஊராகச்
சென்று கொண்டிருந்த காலத்தில் அந்த நாய்,
ஒன்று அந்தப் பல்லக்கின் கீழேயே போகும்;
அல்லது யானையின் தூண் போன்ற நாலு
கால்களுக்கு உள்ளாகவே போகும்.பல்லக்கு
நிறுத்தப்பட்டவுடன் எட்டத்திற்கு ஓடிச் சென்று
பெரியவாள் இறங்கிச் செல்வதை அங்கிருந்தே
கண்குளிரக்கண்டு வாலை ஆட்டும்.

ஒரு முறை அதற்கு வெறிபிடித்து விட்டதாகச்
சிப்பந்திகள் எண்ணினர். சேவகன் ஒருவனிடம்
அதன் கண்ணைக் கட்டி நாற்பது கிலோமீட்டர்
தள்ளியிருந்த ஒரு கிராமத்தில் கயிற்றால்
பிணித்து விட்டுத் திரும்பி வருமாறு பணித்தனர்.

அப்படியே அச் சேவகன் செய்து திரும்பினான்.

அவன் திரும்பும் முன்னரே பைரவனாரும்
திரும்பியிருந்தார்!. அவருக்கு வெறியில்லை
என்று தெரிந்தது.

அன்றிலிருந்து மஹா பெரியவாளைத்
தரிசிக்காமல் உண்பதில்லை என்று அந்த நாய்
உயிர் பிரியம் வரையில் விரதம் காத்தது!

அக்காலத்தில் பிக்ஷை முடித்தபின் சிறிது
சிரம பரிஹாரம் செய்து கொண்டு பெரியவாள்
தமது அருள் ஆஃபீஸை மீண்டும் தொடங்கும்
போது கேட்கும் முதற் கேள்வி.————-
“நாய்க்குப் போட்டாச்சா” என்பதுதான்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Entertainment News

Popular Categories