December 5, 2025, 7:23 PM
26.7 C
Chennai

“நாய்க்குப் போட்டாச்சா?” (நாய்க்கும் ஈந்த நாயகராக நமது சாஸ்திரக் காவலர்)

246400 479182102136836 1433845875 n 4 - 2025

“நாய்க்குப் போட்டாச்சா?”
(நாய்க்கும் ஈந்த நாயகராக நமது சாஸ்திரக் காவலர்)

(பெரியவாள் தமது அருள் ஆஃபீஸை மீண்டும்
தொடங்கும் போது கேட்கும் முதற் கேள்வி.——r”நாய்க்குப் போட்டாச்சா”
என்பதுதான்.)

கட்டுரையாளர்;ரா.கணபதி.
(மஹா பெரியவாள் விருந்து)
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.

நாயைத் தாழ் பிறவியாகவே சாஸ்திரம் கூறும்.
ஆனால் நாய்க்கும் ஈந்த நாயகராக நமது
சாஸ்திரக் காவலர் இருக்கிறார்.

1927-ம் வருஷத்தில் ஒரு நாய் மடத்து முகாமுக்குத்
தானாகவே வந்து காவல் காக்கத் தொடங்கியது.
தமது பிக்ஷை முடிந்தவுடன் அதற்கு ஆஹாரம்
போடுமாறு பெரியவாள் ஆக்ஞாபித்தார்.

விந்தையாக மடத்து பிக்ஷை சேஷத்தை உண்ண
ஆரம்பித்தபின் அது வேறெவர் எது கொடுத்தாலும்
உண்ண மறுத்தது.

ஸ்ரீ மஹா பெரியவாள் பல்லக்கில் ஊர் ஊராகச்
சென்று கொண்டிருந்த காலத்தில் அந்த நாய்,
ஒன்று அந்தப் பல்லக்கின் கீழேயே போகும்;
அல்லது யானையின் தூண் போன்ற நாலு
கால்களுக்கு உள்ளாகவே போகும்.பல்லக்கு
நிறுத்தப்பட்டவுடன் எட்டத்திற்கு ஓடிச் சென்று
பெரியவாள் இறங்கிச் செல்வதை அங்கிருந்தே
கண்குளிரக்கண்டு வாலை ஆட்டும்.

ஒரு முறை அதற்கு வெறிபிடித்து விட்டதாகச்
சிப்பந்திகள் எண்ணினர். சேவகன் ஒருவனிடம்
அதன் கண்ணைக் கட்டி நாற்பது கிலோமீட்டர்
தள்ளியிருந்த ஒரு கிராமத்தில் கயிற்றால்
பிணித்து விட்டுத் திரும்பி வருமாறு பணித்தனர்.

அப்படியே அச் சேவகன் செய்து திரும்பினான்.

அவன் திரும்பும் முன்னரே பைரவனாரும்
திரும்பியிருந்தார்!. அவருக்கு வெறியில்லை
என்று தெரிந்தது.

அன்றிலிருந்து மஹா பெரியவாளைத்
தரிசிக்காமல் உண்பதில்லை என்று அந்த நாய்
உயிர் பிரியம் வரையில் விரதம் காத்தது!

அக்காலத்தில் பிக்ஷை முடித்தபின் சிறிது
சிரம பரிஹாரம் செய்து கொண்டு பெரியவாள்
தமது அருள் ஆஃபீஸை மீண்டும் தொடங்கும்
போது கேட்கும் முதற் கேள்வி.————-
“நாய்க்குப் போட்டாச்சா” என்பதுதான்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories