மகா பெரியவாளின்,விளையாட்டு, தமாஷ் மற்றும் அருள்.

11016095_1598176140468929_6777485663409727415_n மகா பெரியவாளின்,விளையாட்டு, தமாஷ் மற்றும் அருள். சொன்னவர்-ஸ்ரீ இ.எஸ்.வேதபுரி சாஸ்திரிகள். தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா. தட்டச்சு-வரகூரான் நாராயணன் (ஒரு சிறு பதிவு) மகா பெரியவா,ரொம்ப விளையாட்டுப் புருஷர். ராத்திரி நான் தூங்கிண்டிருக்கிறபோது,- ஒரு மணி,ரெண்டு மணிக்கு -என்னை எழுப்புவா. ‘எதுவோ? என்ன முக்கியமான வேலையோ?’ன்னு, பரபரப்போடு எழுந்திருப்பேன் “ராத்திரி என்ன சாப்பிட்டே? வயிறு நிறைய சாப்பிட்டியோ?”ன்னு கேட்டுட்டு “சரி போய் படுத்துக்கோ..”ன்னு சொல்லுவா! ஒரு சின்ன தமாஷ்! மகா பெரியவா, எப்போ உபந்யாஸம் பண்ணினாலும், ச்ருதி ஸ்ம்ருதி புராணானாம் ஆலயம் கருணாலயம்-ங்கிற சுலோகத்தைச் சொல்லிவிட்டுத் தான் பேச்சைத் தொடங்குவா. பிள்ளையார் கோவிலைக் கண்டால் போதும். மகாப் பெரியவாளுக்கு ரொம்ப குஷி வந்துடும்! எல்லாப் பிள்ளையார்க்கும் சிதர்க்காய் போடணும். ‘அப்போதாண்டா குழந்தைகளெல்லாம் வந்து தேங்காய்ச் சில்லு பொறுக்கிக் கொள்ளும்-னு காரணம் சொல்லுவா.மேனாவிலே எப்போதும் தேங்காய் இருக்கும்-சிதர்க்காய் போடறத்துக்காகவே! அதே மாதிரி ஸ்ரீமடத்திலேர்ந்து, காமாக்ஷி கோவிலுக்குப் போகிற போதெல்லாம், கங்கை கொன்டான் மண்டப ஆஞ்சநேயருக்கு ஒரு வாழைப்பழச் சீப்பு நைவேத்யத்துக்குக் கொடுக்கச் சொல்லுவா. ‘புத்திர் பலம்…’ சுலோகம் சொல்லி, ஆஞ்சநேயர் அனுக்ரஹம் வேணும் – என்பார். ஸ்ரீ மடத்திலே, எடுபிடி வேலை செய்கிற சிப்பந்திகளை கவனிக்கவருக்கு கார்வார்-னு பேரு. ஒரு தடவை,அவர் மேனா சுமக்கிற போகிகளுக்குப் படி போடலே. போகிகள் மகாப் பெரியவா கவனத்துக்குக் கொண்டு வரணும்கிறதுக்காக, மேனாவைச் சுமந்துண்டு போறப்போ இப்படிப் பாடினார்கள். ராமா ராமையா காஞ்சி காமாக்ஷி மதுரை மீனாக்ஷி காசி விசாலாக்ஷி இந்த வேளைக்கு இன்னிக்குப் படி போடலே ஐயா தான் கேக்கணும். பெரியவாளுக்கு விஷயம் புரிஞ்சு போச்சு. அப்புறம் கார்வார்கிட்ட பேசி,சமாதானப்படுத்தி போகிகளுக்குப் படி போடச் சொன்னார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

Topics

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

Entertainment News

Popular Categories