நவராத்திரி ஸ்பெஷல்: நவ துர்கைகளில் ஸ்கந்த மாதாவின் சிறப்பு என்ன?

Published:

skandamata2
skandamata2

நவராத்திரி ஸ்பெஷல்… ஆன்மீக கேள்வி பதில்! – 8

தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

கேள்வி: நவ துர்கைகளில் ஸ்கந்த மாதாவின் சிறப்பு என்ன? ஸ்கந்தமாதாவை எவ்வாறு வழிபட வேண்டும்?

பதில்: சிம்ஹாசன கதாநித்யம் பத்மஸ்ரித் கரத்வயா !என்று ஸ்கந்தமாதா வர்ணிக்கப்படுகிறாள்.சுபமஸ்து சதாதேவி ஸ்கந்தமாதா யசஸ்வினி !!என்பது தியான ஸ்லோகம்.

ஸ்கந்தமாதா சிம்ஹ வாகனத்தின் மேல் அமர்ந்திருப்பாள். நான்கு கரங்கள் கொண்டவள். மேல் இரண்டு கரங்களில் பத்மம் தரித்து,  வலது கையால் சுப்ரமணிய சுவாமியை மடியில் இருத்தி, இடதுகையில் வரத முத்திரை தரித்து இருப்பாள். வெண்மையான ஒளியோடு பிரகாசிப்பாள். இவ்வாறு ஸ்கந்தமாதாவை தியானிக்க வேண்டும்.

skandamata
skandamata

விசுத்தி சக்கரத்திற்கு அதிஷ்டான தேவதை ஸ்கந்தமாதா. நிர்மலமானது  விசுத்தி தத்துவம்.

மேலும் ஸ்கந்தமாதா என்று கூறும்போது ஜகதம்பாவின் தாய்மை குணம் இதில் வெளிப்படுகிறது. சுப்பிரமணியர் ஞானத்திற்கு அதிஷ்டமான தெய்வம். சுப்ரமணியரை மடியில் வைத்துக் கொஞ்சும் ஸ்கந்தமாதாவை நாம் தியானித்தால்  அம்பாளிடமிருந்து மாத்ரு வாத்சல்யம் கிடைக்கிறது. மேலும் ஞான சொரூபனான முருகனின் கையில் உள்ள ஆயுதத்தை கொடுத்தது கூட அம்பாளே.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் கோலாகலம்!

ஸ்கந்தமாதாவை உபாசித்து பிரம்ம ஞானத்தை  அடைய முடியும். பிரம்மஞான சொரூபமே சுப்பிரமணியன். பிரம்ம ஞானமும் காருண்யமும்  அருளக் கூடியது ஸ்கந்தமாதா உபாசனை.
இது நவராத்திரியின் ஐந்தாவது நாளில் செய்வது நவதுர்கா வரிசைக் கிரமத்தில்  சிறப்பான வழிமுறை.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img