உறவுகளை வலுப்படுத்தும் பெரிய கும்பிடு திருவிழா..

1809493 kumpidu - 2026

உறவுகளை வலுப்படுத்தும் பெரிய கும்பிடு திருவிழா உடுமலை அருகே புதுப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீபூமிநீளா சமேத ஒவுல்ராயப் பெருமாள் திருக்கோவிலில் வெகு விமரிசையாக நடைபெற்றது.திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள புதுப்பாளையம் பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீபூமிநீளா சமேத ஒவுல்ராயப் பெருமாள் திருக்கோவில். பிரசித்தி பெற்ற இக்கோவிலில் குறிப்பிட்ட வருட இடைவெளிக்கு ஒருமுறை சுள்ளார் குலத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடும் பெரிய கும்பிடு திருவிழா விமர்சையாக நடைபெறும்.

வழக்கம் போல் இந்த வருடமும் பெரியகும்பிடு திருவிழா புதுப்பாளையம் பகுதியில் களைகட்டியது. தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து ஸ்ரீ பூமிநீளா சமேத ஒவுல்ராயப் பெருமாள் கோவில் பகுதியில் ஒன்று கூடிய ஆயிரக்கணக்கான சுள்ளார்குல மக்கள் பாரம்பரிய வழக்கப்படி உறவுகளை வலுப்படுத்தும் வகையில் ஒருவர் கையை ஒருவர் பிடித்துக்கொண்டு கோவிலில் இருந்து ஊர்வலமாக சென்று தேர்ந்தெடுக்கபட்ட மைதானத்தில் ஒன்று கூடினர்.

பின்னர் பூமியில் முகம்பதித்து படுக்க மூத்த பூசாரிகள் சிறப்பு பூஜை செய்யபட்ட புனித நீரை தெளித்தும் பிரம்பால் மேலே தொட்டு ஆசிர்வாதம் வழங்கியும் வழிபாடு செய்தனர். மைதானத்திலிருந்து கைகளை பிரியாமல் கோவிலை வந்தடைந்தவர்களுக்கு பாலில் கைகளை நனைத்து பூசாரிகள் பிரித்துவிட்டனர். தொடர்ந்து தொன்று தொட்டு நடத்தபடும் பாரம்பரிய வழிபாடுகள் நடத்தப்பட்டது.

இது பற்றி சுள்ளார் குல மக்கள் கூறுகையில், உறவுகளுக்குள் புரிதல்கள் இல்லாமல் பல்வேறு மன கசப்புகள் அதிகமாகும் இக்காலத்தில் உறவுகளுக்குள் பிணைப்பை ஏற்படுத்தி வலுப்படுத்த இத்திருவிழா நடத்தபடுகிறது.பெரிய கும்பிடு விழாவிற்கு அழைக்கசெல்லும் போது என்ன சண்டை சச்சரவுகள் இருந்தாலும் மனதில் வைக்காது கட்டாயம் உறவுகளுக்கு அழைப்பு விடுப்பதும், அவர்களும் மறுக்காமல் சீர் வரிசைகளோடு விழாவிற்கு வந்து விடுவதால் ஒற்றுமை ஏற்படுகிறது. மேலும் சில குடும்பத்தினருடன் தொடங்கிய குலம் இன்று பல ஆயிரம் பேர்களுடன் பரவியிருப்பதால் அனைவரையும் அறிந்து கொள்ள இந்த பெரியகும்பிடு திருவிழா உதவுகிறது என்றனர்.

உறவுகளை ஒன்றிணைக்கவும், புதிய உறவுகளை அறிந்து கொள்ளவும் ஏற்படுத்தபட்ட பெரிய கும்பிடு விழா திருப்பூர் மாவட்ட மக்களை ஆச்சர்யப்பட வைத்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Entertainment News

Popular Categories