திருப்புகழ் கதைகள்: பிரமனை சிறைபிடித்த கதை!

thiruppugazh stories
thiruppugazh stories

திருப்புகழ் கதைகள் பகுதி 31
கருவடைந்து (திருப்பரங்குன்றம்)திருப்புகழ்
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

அடுத்த மூன்று பத்திகள் பின் வருமாறு…

இரவி இந்த்ரன், வெற்றிக் குரங்கின்
     அரசர் என்றும், ஒப்பற்ற உந்தி
     இறைவன் எண்கு இனக்கர்த்தன் என்றும்,…..நெடுநீலன்

எரியது என்றும், ருத்ரன் சிறந்த
     அநுமன் என்றும், ஒப்பற்ற அண்டர்
     எவரும் இந்த வர்க்கத்தில் வந்து …… புனம் மேவ,

அரிய தன் படைக்கர்த்தர் என்று,
     அசுரர் தம் கிளைக் கட்டை வென்ற,
     அரிமுகுந்தன் மெச்சு உற்ற பண்பின் ……மருகோனே!

இந்த மூன்று பத்திகளில் வானரங்களின் கதையைக் கூறுகிறார் அருணகிரியார். அதாவது – சூரியனும் இந்திரனும் வெற்றி பொருந்திய வானரங்களுக்கு அரசராக சுக்ரீவன்,வாலியாகவும், துழாய் முடியோனது உந்தியின்கண் உதித்த, சமானமற்ற, இறைவனாகிய பிரமன் கரடிமுகச் சேனைகளுக்குத் தலைவனாக சாம்பனாகவும், அக்கினி பகவான் ஆற்றலில் சிறந்த நீலனாகவும், உருத்திர மூர்த்தி அறிவு, கல்வி, ஞானம், பக்தி, பணிவு, வைராக்கியம், பிரமசரியம் முதலியவைகளால் சிறப்பு வாய்ந்த அனுமனாகவும், இணையற்ற தேவர்கள் யாவரும் இத்தகைய வானர வர்க்கத்தில் உதித்து முன்னதாக வனத்தில் வந்து இருக்க, தான் இராமனாக அவதரித்து வந்து அவ்வானர வீரர்களைத் தனக்கு அரிய சேனைகளாகவும் சேனைத் தலைவர்களாகவும் கொண்டு இராவணாதி அசுர குலங்களின் கூட்டத்தை அழித்து வெற்றி பெற்ற அரிமுகுந்தராகிய இராகவன் மெச்சுவதற்குத் தகுந்த சிறந்த குணங்களையுடைய மருகனாக எழுந்தருளினவரே என முருகப் பெருமானை அவர் பாடுகின்றார்.

ALSO READ:  பெட்ரோல் சிக்கனம்; வெளிநாட்டு பயணம், தங்கம் வாங்குதலைத் தவிர்க்கவும்; பிரதமர் மோடி வேண்டுகோள்!

கம்பராமாயணத்தில், தேவர்கள் வானரர்களாகப் பிறந்த வரலாறு பாலகாண்டத்தில், திருஅவதாரப் படலத்தில், பின்வரும் பாடல்களில் கூறப்படுகிறது.

வான் உளார் அனைவரும்வானரங்கள் ஆய்க்,
கானினும், வரையினும்,கடி தடத்தினும்,
சேனையோடு அவதரித்திடுமின்சென்று! ‘என,
ஆனனம் மலர்ந்தனன்,அருளின் ஆழியான்.

என்னை ஆள் உடைய ஐயன்கலுழன் மீது எழுந்து போய
பின்னர், வானவரை நோக்கிப்பிதாமகன் பேசு கின்றான்.
‘முன்னர் ஏய் எண்கின் வேந்தன் யான்‘என மொழிகின்றான், மற்று,
‘அன்ன ஆறு எவரும் நீர் போய்அவதரித்திடுமின்! ‘என்றான்.

தரு உடைக் கடவுள் வேந்தன்சாற்றுவான் ‘எனது கூறு
மருவலர்க்கு அசனி அன்னவாலியும் மகனும் ‘என்ன,
இரவி, மற்று, ‘எனது கூறு அங்குஅவற்கு இளையவன் ‘என்று
அரியும் மற்று, ‘எனது கூறு நீலன்‘என்று அறைந்திட்டானால்.

வாயு மற்று, ‘எனது கூறு மாருதி‘எனலும், மற்றோர்
‘காயும் மற்கடங்கள் ஆகிக்காசினி அதனின் மீது
போயிடத் துணிந்தோம் ‘என்றார்;புயல் வண்ணன் ஆதி
வானோர்
மேயினர் என்னில், இந்தமேதினிக்கு அவதி உண்டோ?

அருள் தரு கமலக் கண்ணன்அருள் முறை, அலர் உேளானும்
இருள் தவிர் குலிசத்தானும், அமரரும்,இனையர் ஆகி
மருள் தரு வனத்தின், மண்ணின்வானரர் ஆகி வந்தார்;
பொருள் தரும் எவரும் தத்தம்உறை இடம் சென்று புக்கார்.

ALSO READ:  பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

இவ்வாறு தேவர்கள் வானரர்களாகப் பிறந்த கதையை அருணகிரியார் இப்பாடலில் அழகாகத் தந்துள்ளார். அவர் கூற்றின் படி

பிரமதேவர் – ஜாம்பவான் என்ற கரடி வேந்தன்
இந்திரன்வாலியாகப்பிறந்தான்
சூரியன் சுக்ரீவனைத் தோன்றவைத்தான்.
அக்கினி பகவான் நீலனாகப் பிறந்தான்.
வாயு அமிசத்தோடு ருத்ர அமிசமும் கலந்து அனுமார் பிறந்தார்.
இந்திரன் தம்பி உபேந்திரன் அங்கதனாகவும்,
விஸ்வகர்மா நளனாகவும்,
அசுவினி தேவர்கள் மைந்தன் துவிதர்களாகவும்
வருணன் சுஷேணனாகவும்,

இப்படி தேவர்கள், கந்தருவர்கள் வித்தியாதரர்கள் முதலியோர் இராவணவதத்தின் பொருட்டு மலைபோன்ற சரீரத்தோடும், அளவிட முடியாத ஆற்றலோடும், ஆயிரக்கணக்கான வானர வீரர்களாக மலைப் பிரதேசங்களில் அவதரித்தார்கள்.

இந்தப் பாடலின் கடைசிப் பத்தி

அயனையும் புடைத்துச் சினந்து,
     உலகமும் படைத்து, பரிந்து
     அருள் பரங்கிரிக்குள் சிறந்த …… பெருமாளே. என்ற வரிகளாகும். இவ்வரிகளில் பிரமனைச் சிறை பிடித்த வரலாறு கூறப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

Entertainment News

Popular Categories