“பெரியவா பண்ணின வேடிக்கையும் ஆச்சர்யமும்”

Published:

“பெரியவா பண்ணின வேடிக்கையும் ஆச்சர்யமும்” சொன்னவர்-ஸ்ரீ மடம் பாலு. தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா. மறு தட்டச்சு-வரகூரான் நாராயணன்

1507603_10202994818654217_4035239553088867808_n
அகண்டகாவேரிப் பகுதியில் பெரியவா
சஞ்சரித்துக் கொண்டிருந்தார்கள்.
 
ஒரு நாள், முகாம் செய்திருந்த இடத்துக்கு அருகிலிருந்த தென்னந்தோப்புக்குப் போனார்கள்.
தோப்பு மரங்களில் நூற்றுக்கணக்கான காகங்கள் இருந்தன.
 
உடன் வந்திருந்த ஒரு பையனைப் பார்த்து,
“இந்தக் காக்கைகளையெல்லாம் 
கத்தச் சொல்லட்டுமா?” என்றார்கள் பெரியவா.
 
பையனுக்கு என்ன பதில் சொல்வதென்று
புரியவில்லை.
 
“இதோ,பார்…”என்று சொல்லிவிட்டு,காகத்தைப் போலவே, கா….கா…..என்று கத்தினார்கள்,பெரியவா.
 
எல்லாக் காகங்களும் கோரஸாக எதிரொலி கொடுத்தன.
 
பெரியவா சொன்னார்கள்; ‘காகங்கள் கத்துகின்றன.
நிறைய விருந்தாளிகள் வருவார்கள் என்று சூசகம்.
நிறைய சாப்பாடு தயார் பண்ணச் சொல்லு…’
 
‘நிறைய சமைத்தால், எல்லாம் வேஸ்டாகிப் போகும்.
சாப்பிடுவதற்கு மனிதர்கள் எங்கே?’
என்று சிஷ்யர்கள் சங்கடப்பட்டார்கள்.
 
பக்கத்து, ஏதோ ஊரில், காங்கிரஸ் கட்சியின் கூட்டமாம்.
அந்தக் கூட்டத்துக்கு வந்தவர்கள், பெரியவா அருகில்
இருப்பது தெரிந்ததும் தரிசனத்துக்கு வந்து விட்டார்கள்.
 
எல்லாரையும் சாப்பிட்டு விட்டுப் போகும்படி பெரியவா பணித்தார்கள்.
 
கடைசியில், ஒரு பிடி சோறு மிஞ்சவில்லை!
ALSO READ:  கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

Related articles

Recent articles

spot_img