திருப்பரங்குன்றம் கும்பாபிஷேகம்: விழாக்கோலம் பூண்ட மதுரை!

thirupparankundram murugan emple vaikasi visakam - 2026

தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் முதலாவது படை வீடான மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நாளை ஜூலை 14 மகா கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது

இதற்காக மதுரை மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் இன்று திருப்பரங்குன்றம் புறப்பாடாகி சென்றனர். திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நாளை மகா கும்பாபிஷேகம் நடைபெறுவதால் மதுரை திருப்பரங்குன்றம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் விழாக்கோலம் பூண்டுள்ளது.

முருகப்பெருமான் அருளாட்சி புரியும் அறுபடை வீடுகளில் முதல்படை வீடு கொண்ட திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 14 ஆண்டுகளுக்கு பிறகு நாளை திங்கட்கிழமை மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.இக் கோயிலில் ரூ.2 கோடியே 36 லட்சத்தில் 20 திருப்பணிகள் நடந்துள்ளது.

அதில் ரூ.90 லட்சத்தில் கோவிலின் கம்பீரமான சுமார் 125 அடி உயரம் கொண்ட ராஜகோபுரத்தில் பஞ்சவர்ணம் பூசப்பட்டு தயார்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கோவிலின் பிரதானமான கருவறையில் மின் விளக்குகள் பொருத்தல், பக்தர்கள் தரிசன வரிசையில் பித்தளை கம்பி பொருத்தல் உள்ளிட்ட சில பணிகள் நடந்துள்ளது.

இந்த நிலையில் ‘கல்கம்’ என்ற 55 வகையான மூலிகையை கொண்டு மருந்து சாத்தப்பட்டு தயார்படுத்தப்பட்டுள்ளது. கோவிலின் வெளிப்பிரகாரத்தில் உள்ள சஷ்டி மண்டபம் மற்றும் வள்ளி தேவஸ்தான மண்டபம் வளாகத்தில் 75 குண்டங்கள் அமைத்து கடந்த 10-ந் தேதி யாக சாலை அமைக்கப்பட்டு முதல் கால வேள்விகள் நடந்தது.

ALSO READ:  10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

கடந்த 11-ந் தேதி காலை மற்றும் மாலையில் 2-ம் கால, 3-ம் கால யாகவேள்விகள் நடந்தது. நேற்று காலையிலும், மாலையிலுமாக 4-ம் கால மற்றும் 5-ம் கால யாகவேள்வி நடந்தது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) 6-ம் கால மற்றும் 7-ம் கால யாக வேள்விகள் நடந்தது. நாளை திங்கட்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு 8-ம் கால யாக வேள்விகள் நிறைவு பெறுகிறது.

தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களில் இருந்து வந்துள்ள 150 சிவாச்சாரியர்கள் யாகசாலை பூஜை செய்து வருகின்றனர். 85 ஒதுவார்கள் மூலம் தமிழ் வேத பாராயணம் நடந்து வருகிறது.

நாளை அதிகாலை 4.30 மணியளவில் யாகசாலையில் இருந்து மங்கள வாத்தியங்கள் முழங்க ராஜகோபுரத்திற்கு தங்கம், வெள்ளி கடம் புறப்பாடு நடக்கிறது. அங்கு அதிகாலை 5.25 மணிக்கு ராஜகோபுரத்தில் கும்பாபிஷேகம் நடைபெறம்.

திருப்பரங்குன்றத்தில் நாளை மகா கும்பாபிஷேகம் நடை பெறுவதை பார்க்க மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் இன்று திருப்பரங்குன்றம் புறப்பட்டு சென்றனர்

நாளை அதிகாலை 4.30 மணியளவில் யாகசாலையில் இருந்து மங்கள வாத்தியங்கள் முழங்க ராஜகோபுரத்திற்கு தங்கம், வெள்ளி கடம் புறப்பாடு நடக்கிறது. அங்கு அதிகாலை 5.25 மணிக்கு ராஜகோபுரத்தின் 7 கலசங்களிலும் புனித நீர் ஊற்றப்பட்டு கோலாகலமாக கும்பாபிஷேகம் நடக்கிறது.

இதே போல கோவிலுக்குள் உள்ள கோவர்த்தனாம்பிகையின் விமானம், விநாயகரின் விமானம் மற்றும் பசுபதி ஈசுவரர் விமானத்திற்கு மேள தாளங்கள் முழங்க கடம் புறப்பாடாகி புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடக்கிறது. ராஜகோபுரம் மற்றும் விமானங்களுக்கு கும்பாபிஷேகம் முடிந்ததும் காலை 6.10 மணியளவில் கோவிலின் கருவறையில் முருகப்பெருமானின் திருக்கரத்தில் மகா அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடக்கிறது.

ALSO READ:  டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

இந்த நிகழ்வில் தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் குவிந்து தரிசனம் செய்கிறார்கள். கும்பாபிஷேக ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத்தலைவர் ப.சத்யபிரியா பாலாஜி, அறங்காவலர்கள் வ.சண்முகசுந்தரம், நா.மணிச்செல்வன், கோவில் துணை கமிஷனர் சூரியநாராயணன், சிவாச்சாரியர்கள், கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்

மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை (திங்கட்கிழமை) கும்பாபிஷேகம் நடக்க இருப்பதை முன்னிட்டு மீனாட்சி, சுந்தரேசுவரர் பஞ்சமூர்த்திகளுடன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு கோவில் இருந்து புறப்பாடாகி திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் எழுந்தருளுகிறார்கள்.

எனவே இன்று மாலை 6 மணி வரை மட்டுமே மீனாட்சி கோயிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். பின்னர் கோவிலில் பூஜைகள் நடைபெற்று அன்று இரவு 10 மணிக்கு மீனாட்சி, சுந்தரேசுவரர் பஞ்சமூர்த்திகளுடன் புறப்பாடாகி நள்ளிரவு திருப்பரங்குன்றம் கோவிலை சென்றடைவர்.

அங்கு நாளை கும்பாபிஷேக விழாவில் எழுந்தருளி மீண்டும் இரவு திருப்பரங்குன்றம் கோவிலில் இருந்து புறப்பாடாகி நள்ளிரவு மதுரை மீனாட்சி, சுந்தரேசுவரர் கோவிலில் வந்து சேர்த்தியாவார்கள். எனவே நாளை முழுவதும் மீனாட்சி அம்மன் கோவில் நடைசாத்தப்பட்டிருக்கும். இன்று மாலை 6 மணி முதல் மறுநாள் 14-ந் தேதி முழுவதும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

ALSO READ:  மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:

மேலும் பக்தர்களின் வசதிக்காக இன்று மாலை 6 மணி முதல் மற்றும் நாளை (14-ந் தேதி) முழுவதும் தற்போது வழக்கத்தில் உள்ளபடி கலைக்கூடத்திற்கும் (ஆயிரங்கால் மண்டபம்) மற்றும் அன்னதானத்திற்கும் அத்துடன் அன்றைய தினம் நடைபெறும் திருமணங்களுக்கு வன்னிமரத்தடி விநாயகர் கோவிலுக்கும் பக்தர்களை ஆடிவீதிகளில் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள்.

மேலும் 15-ந் தேதி வழக்கம் போல் அதிகாலை முதல் பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் கலசங்களிலும் புனித நீர் ஊற்றப்பட்டு கோலாகலமாக கும்பாபிஷேகம் நடக்கிறது.

இதே போல கோவிலுக்குள் உள்ள கோவர்த்தனாம்பிகையின் விமானம், விநாயகரின் விமானம் மற்றும் பசுபதி ஈசுவரர் விமானத்திற்கு மேள தாளங்கள் முழங்க கடம் புறப்பாடாகி புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடக்கிறது. ராஜகோபுரம் மற்றும் விமானங்களுக்கு கும்பாபிஷேகம் முடிந்ததும் காலை 6.10 மணியளவில் கோவிலின் கருவறையில் முருகப்பெருமானின் திருக்கரத்தில் மகா அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூலை 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் ஜூலை 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூலை 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பேசினார்.

உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

உணவுப்பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள் உங்களை வணங்குகிறேன்-சம்பா மிளகாய் மதிப்புக்கு கூட்டப்பட்ட உற்பத்தி நிறுவனமான குளோபல் சில்லி அக்ரோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை திறந்து வைத்து

Entertainment News

Popular Categories