திருச்செந்தூர்:
இன்று தைப்பூச விழாவை முன்னிட்டு அனைத்து முருகன் ஆலயங்களும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
அதன் ஒரு பகுதியாக, திருச்செந்தூர் தைபூசத் திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய இன்று குவிந்தனர். உள்ளூர், வெளியூர் பக்தர்களுடன் வெளிநாட்டு முருக பக்தர்களும் அதிக அளவில் திருச்செந்தூரில் குவிந்திருந்தனர். கடலில் புனித நீராடி ஆலயத்துக்குச் சென்று மகிழ்ந்தனர்.


