உபன்யாசத்தில் கேட்டு ரசித்தது

உபன்யாசத்தில் கேட்டு ரசித்தது :

        ஸ்ரீ.பராசர பட்டர், ஸ்ரீ.கூரத்தாழ்வானின் திருக்குமாரர்.  ஸ்ரீரங்கத்தில் வாசம் செய்து கொண்டிருந்த பட்டருக்கு, ஸ்ரீரங்கநாதனை விட, ஸ்ரீ.ரங்கநாச்சியாரிடம் தான் மிகுந்த ஈடுபாடு ,பக்தி.
         இதைக் கண்ணுற்ற அரங்கனுக்கு ஒரே பொருமல்.’ நம்மிடம் இல்லாத எந்த தனித்தன்மை நம் பிராட்டியிடம் இவர் கண்டு விட்டார் ? சரி நேரம் வரும்போது அவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வோம்’….. எனக் காத்திருந்தார்.
      அதற்கான நேரமும் வந்தது .’ அத்யயன உத்சவம் ( வைகுண்ட ஏகாதசி) ஆரம்பமாயிற்று.வைகுண்ட ஏகாதசி அன்று முதல் நாள் எப்பொழுதும் ஸ்ரீ.நம்பெருமாள், ‘ நாச்சியார் திருக்கோலம்’ சாற்றிக் கொண்டு , அதி அற்புதமான ‘ மோஹினி அலங்காரத்துடன்’ பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.
        அன்றும் அதே போல ‘ மோஹினி அலங்காரம் ‘ அழகுற சாற்றிக் கொண்டு, புறப்பாட்டுக்கு எழுந்தருளும் முன்பாக , அர்ச்சகரை அழைத்து , ஸ்ரீ.பராசர பட்டரை தனிமையில் தன்னிடம் அழைத்து வரும்படியாக ஆஞ்ஞாபித்தார்.
             அர்ச்சகர் விண்ணப்பத்திற்கிணங்க, ஸ்ரீ.பட்டரும் திரைக்கு பின்பாக எழுந்தருளி இருந்த ஸ்ரீ.நம்பெருமாள் முன்பு  சென்று அவரைப் பணிந்தார்.
              ஸ்ரீ.நம்பெருமாள் பட்டரிடம்” என்ன பட்டரே! நம் நாச்சியார் திருக்கோலம் எப்படி ? உம்முடைய நாச்சியாரைப் போலவே நாமும்  அழகுற இருக்கிறோம் இல்லையா ? பதலளியுங்கள்”…… என்று வினவ,
        ஸ்ரீ.பட்டரும் பெருமாளை ஒரு முறை அவருடைய திருமுடி முதல் திருவடி பரியந்தம் ஏற இறங்க பார்வையிட்ட பின்பு ” தேவரீர் இந்த நாச்சியார் திருக்கோலத்தில் அதி சௌந்தர்யத்துடன் தான் சேவை சாதிக்கிறீர்.ஆனாலும் …….. என்று  இழுத்த மாதிரி நிறுத்தினார்.
         பெருமாள் ” என்ன பட்டரே! ஏன் சொல்ல வந்ததை பாதியிலேயே நிறுத்தி விட்டு மென்று விழுங்குகிறீர்? உம் நாச்சியாரைப் போலவே தானே இருக்கிறேன்? சொல்ல  வந்ததை முழுமையாகச் சொல்லுங்கள்”…. என்று கேட்க,
     பட்டர் பெருமாளிடம்,” ஸ்வாமி! தங்கள் நாச்சியார் திருக்கோலம் அதி அற்புதம் தான்.அதில் எள்ளளவும் எனக்கு  சந்தேகம் இல்லை, ஆனால் எம்முடைய நாச்சியாரின் கருணையைப் பொழியும் பார்வை உம்மால் பார்க்க இயலாது.உம்முடையப் புருஷப் பார்வை உம்மை எம் நாச்சியாரிடமிருந்து வேறு படுத்திக் காட்டி விடுகிறதே! நீவிர் என்ன முயன்றாலும் எம் நாச்சியாரின் கருணையை அப்படியே பொழியும் பார்வையை உம்மால் பார்க்க  இயலாது”……. என்று  சொல்லி முடித்தாராம்.
        இதைக் கேட்ட பெருமாளுக்கு உள்ளூர பெருமகிழ்ச்சி.தம் நாச்சியாரின் பெருமை ஒரு பக்தனின் வாயிலாக வெளிப்பட்டதில் பரமாத்மா பேருவகை அடைந்தார் என்பது சரித்ரம்.
        எனவே நாம் திருக் கோயில்களுக்கு செல்ல நேர்கையில், பெருமாளின் சன்னதி முன்பு தாயாரின் ப்ரபாவங்களைச் சொல்லும்  ஸ்தோத்திரங்களையும், தாயாரை சேவிக்கும் போது, அவள் முன்பு பெருமாளின் ஸ்தோத்திரங்களையும் சொல்லும் போது இருவரும்  ஒருவர் மற்றவரின் ப்ரபாவங்களைக் கேட்டு மனமுவந்து நம்மை அனுக்ரஹிக்கிறார்கள் என்பது சான்றோர் வாக்கு .
       அவ்வாறே நாமும் பின்பற்றி , திவ்யதம்பதிகளின் கருணா கடாக்ஷத்திற்கு பாத்திரர்களாவோம்.
          ஸ்ரீ.ரங்கநாதன் ஸ்ரீ.ரங்கநாச்சியார் திருவடிகளே சரணம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திமுக., அதிமுக., யார் வென்றால் என்ன நடக்கும்?

தோற்றால் அண்ணாமலையின் செல்வாக்கு, கட்சிக்குள் பெருகும். கட்சி முழுமையாக அவர் கட்டுப்பாட்டுக்குள் போகும். தமிழக பாஜக வளர அது உதவும்.

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

Topics

திமுக., அதிமுக., யார் வென்றால் என்ன நடக்கும்?

தோற்றால் அண்ணாமலையின் செல்வாக்கு, கட்சிக்குள் பெருகும். கட்சி முழுமையாக அவர் கட்டுப்பாட்டுக்குள் போகும். தமிழக பாஜக வளர அது உதவும்.

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

Entertainment News

Popular Categories