விசாக நட்சத்திரக் கோயிலில் பிப். 6, 20 தேதிகளில் சனிமகா பிரதோஷ விழா

Published:

மதுரை:

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம், சோழவந்தான் அருள்மிகு பிரளயநாத சுவாமி கோயிலில் ( விசாக நட்சத்திரக் கோயிலில்), பிப். 6, 20 ஆகிய தேதிகளில் சனிமகா பிரதோஷ விழாவானது மாலை 4 மணிக்கு தொடங்குகிறது.
இக் கோயிலின் ஸ்தலநாதர் பிரளயநாதசுவாமியானவர் ராகுவுக்கு அதிபதியாவார். ஸ்தல மூர்த்தி சனீஸ்வரலிங்கம், ஸ்தல நட்சத்திரமானது விசாகம் குருவுக்கு அதிபதியாகும்.
சனிமகாபிரதோஷத்தையொட்டி, இக் கோயிலில் அமைந்துள்ள நரசிம்மர், சனீஸ்வரலிங்கம், நந்திகேஷ்வரன், பிரளயநாதருக்கு பிப். 6, 20 ம் தேதிகளில் மாலை 4 மணிக்கு சிறப்பு அபிஷேகங்களும், அதைத் தொடர்ந்து அனைத்து பக்தர்களுக்கு அர்ச்சனைகளும் செய்யப்படும்.
இத்தைத்தொடர்ந்து, சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் அலங்காரமாகி கோயில் பிரதாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கவுள்ளார்.
அதையடுத்து சோழவந்தான் தொழிலதிபர் எம். மணி குடும்பத்தார் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்படும்.
இதற்கான ஏற்பாடுகளை, கோயில் தக்கார் ப. லதா, பள்ளித் தாளாளர் டாக்டர் எம். மருதுபாண்டியன், பிரதோஷ விழாக்குழுவினர், கணக்கர் சி. பூபதி மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

ALSO READ:  திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

Related articles

Recent articles

spot_img