காஞ்சியில் ஸ்ரீராமானுஜர் உற்ஸவம் தொடக்கம்

Published:

ஸ்ரீமதே ராமானுஜாய நம: அனைத்துலகும் வாழப்பிறந்தவரான எதிராச மாமுனிவருடைய உத்ஸவம் இன்று தொடங்கப் பெறுகிறது.. வாழி எதிராசன்.. வாழி எதிராசன்.. என நாற்றிசையும் தொண்டர் குழாம் , ஏற்றி மகிழும் தன்னிகரில்லாச் சிறப்புடைய திருநாளாம் சித்திரைத் திருவாதிரைத் திருநாள்.. ந சேத் ராமானுஜேத்யேஷா சதுரா சதுரக்ஷரீ காமவஸ்தாம் ப்ரபத்யந்தே ஜந்தவோ ஹந்த மாத்ருச: என்கிறபடியே ராமாநுசர் திருவவதரித்திருக்கவில்லையெனில் நம் போல்வார் நிலை மிக மிக வருந்தத் தக்கதாயிருந்திருக்கும்.. வைணவம் என்பது ஒற்றுமையின் அடையாளம்.. அனைவரையும் விஷ்ணு சம்பந்திகளாக அடையாளம் காட்டுவதன் மூலம், உலகத்தினர் அனைவரையும் ஓர் குடும்பத்தினராக இணைக்கும் காரியத்தை வெற்றிகரமாக செய்து காட்டிய உயர்ந்த சமயம் வைணவம்.. த்ரிஜகத் புண்ய பலமான த்ரிதண்டத்தை கையிலேந்தியவராய்.. நம் அனைவருடைய ஆன்ம நன்மைக்காக பாடுபட்டவரான ராமானுசரை குருவாகப் பெற்றமை நம் அனைவருடைய பேறாகும்.. இன்று காலை , ராமானுசர் உத்ஸவ தொடக்கத்தினை ஒட்டி , ஸ்ரீ காஞ்சீயில் , எம்பெருமானார் விஷயமான முக்தக ச்லோகங்களும், ஸ்ரீ வரவரமுனி சதகமும் அனுசந்தித்தபடி திருவீதி ப்ரதக்ஷிணம் நடைபெற்றது.. தகவல்: அக்காரக்கனி ஸ்ரீநிதி  

ALSO READ:  செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

Related articles

Recent articles

spot_img