குற்றாலத்தில்… அருமையான புதிய அருவி… ஆனால் அழிவின் விளிம்பில்! கரடி அருவியைக் காப்பாத்துங்க.. ப்ளீஸ்!

courtallam karadifalls6 - 2026
Special Story: குற்றாலம் – ஐந்தருவி சாலையில் குற்றால மலைப் பகுதியில் உள்ள கரடி அருவி

அழிவின் விளிம்பில் உள்ளது, குற்றாலத்தில் புதியதாக உதயமாகிக் கொண்டிருக்கும் கரடி அருவி. வனத்துறையினர் இதனைக் காப்பாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள்!

குற்றாலத்திற்கு சுற்றுலா வரும் விவிஐபி., பயணிகள் குற்றாலம் மெயின் அருவி, சிற்றருவி, புலியருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் கூட்டத்தோடு கூட்டமாக குளித்து முடித்துவிட்டு கடைசியாக ஹாய்யாக தனிமையில் குளிக்க, கரடி அருவிக்கு வருகின்றனர்.

குற்றாலத்தில் முன்னர் ஐந்தருவிக்கு மேல் உள்ள பழத்தோட்ட அருவியில் குளிக்க அதுபோல் விஐபி.,கள் வருவதுண்டு. இதற்காக வருவாய்த்துறை, வனத்துறை அனுமதியெல்லாம் பெற்றுக் கொண்டு விஐபி.,க்கள் செல்வர். ஆனால் இப்போது அது தடை செய்யப் பட்டு விட்டதால், கரடி அருவியை நோக்கி படை எடுக்கின்றனர் பலர்.

குற்றாலம்- ஐந்தருவி மெயின் ரோட்டின் இடதுபுறம் உள்ள கரடி அருவி, வனத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. வனத்துறை கட்டுப்பாட்டுப் பகுதியில் அமைந்துள்ள இந்த காட்டுப் பகுதிகளிலிருந்து வனவிலங்குகள் கீழே இறங்காமல் இருக்க தமிழக அரசு வனத்துறை மூலம் மின்வேலி அமைத்துள்ளது.

courtallam karadifalls story1 - 2026
Special Story: குற்றாலம் கரடி அருவிப் பகுதியில் வனத்துறை தடையையும் மீறி உள்ளே நுழைந்து நாசம் செய்பவர்களால்… அங்கங்கே கிடக்கும் கண்ணாடி மது பாட்டில்கள்…

மின் வேலி அமைக்கப் பட்டுள்ளதால், அருவிப் பகுதியைக் கடந்து எவரும் மேலே செல்ல முடியாது. குறிப்பாக, இந்த அருவிப் பகுதிக்கே செல்வது இயலாத காரியம்தான். என்றாலும், வேலியைக் கடந்து பலர் வனத்துறையினருக்குத் தெரியாமல் அருவிப் பகுதிக்குச் செல்கின்றனர் என்று கூறப் படுகிறது.

பொதுவாக, கரடி அருவியில் குளிக்க வருபவர்களுக்கு வனத்துறை சார்பில் அனுமதி அளிக்கப்படுவதில்லை. ஆனால், சிலர் வனத்துறையினரின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு, கரடி அருவிக்கு வந்துவிடுகின்றனர். இங்கே “உற்சாக’க் குளியல் நடத்துவது பலருக்கு வாடிக்கையாக உள்ளது.

உற்சாகம் என்றால்… வழக்கம் போல் சரக்கு பாட்டில் கொண்டாட்டம்தான்! அதற்காகவே இங்கே பலவித தடைகளையும் தாண்டி வருகின்றனர். மின்வேலியை வளைத்து, அருவிப் பகுதிக்குள் வந்து குளிப்பதுடன், மது அருந்தி விட்டு, கண்ணாடி பாட்டில்களை ஆங்காங்கே போட்டு விடுகின்றனர்.

courtallam karadifalls story2 - 2026
Special Story: குற்றாலம் கரடி அருவியில் வனத்துறையினர் ஆசியுடன் உள்ளே சென்று குளிக்கும் பயணிகள்… ஆயில் மசாஜ், சோப்பு ஷாம்பு பயன்படுத்தி குளிக்கும் நிலை….

அவற்றில் பலவற்றை தூர எறிந்து பாறைக் கற்களில் பட்டு உடைத்தும் போடுகின்றனர். இதனால் ஆங்காங்கே கண்ணாடிச் சில்லுகள் உடைந்து, கூராக நிமிர்த்திக் கொண்டு, வருபவரின் கால்களைப் பதம் பார்க்க காத்திருக்கின்றன. இவை, மனிதர்களை மட்டுமல்ல…. இங்குள்ள வன விலங்குகளின் கால்களையும் பதம் பார்த்து, உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தி விடுகின்றன. மேலும், பிளாஸ்டிக் கவர்கள், கப்புகள் இவை இங்கே நிறைந்திருக்கின்றன.

இவை, வனத்துறையினருக்கு தெரியாமல் மட்டும் நடக்கவில்லை என்று குற்றம் சாட்டும் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள், மதுபான மொடாக்குடியர்கள் மற்றும் ஆயில் பாத் ஆயில் மசாஜ் செய்யக் கூடிய நபர்கள் என, பணம் படைத்தவர்கள் வனத்துறை அனுமதியோடுதான் உள்ளே நுழைகின்றனர் என்று குற்றம் சாட்டுகின்றனர்.

வனத்தைப் பாதுகாக்க வேண்டிய வன பாதுகாவலர்கள் பணத்துக்காக இப்படி வனச் சூழலைக் கெடுக்க உடந்தையாக இருப்பது மிகவும் வருந்தத் தக்கதும், கண்டனத்துக்கு உரியதும் ஆகும் என்கின்றனர் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள்!

courtallam karadifalls story3 - 2026
Special Story: குற்றாலத்தில் உள்ள கரடி அருவியில் சென்று குளித்து விட்டு, அருவிப் பகுதியை நாசம் செய்து வரும் மது மொடாக் குடியர்களின் கைவரிசையால் சீர்கேடு அடைந்துள்ள பகுதி…

பொதுவாக, குற்றால அருவிப் பகுதிகளில் சோப்பு, ஷாம்பு, எண்ணெய் உள்ளிட்டவற்றை பயன்படுத்தக் கூடாது என்பது 2014ஆம் வருடம் மதுரை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் உத்தரவு பிறப்பித்திருந்தார். அந்த உத்தரவின் படி, குற்றால அருவியை ஒட்டிய பகுதிகளில் சோப்பு, ஷாம்பு விற்பனை செய்யும் கடைகள் அகற்றப் பட்டன. எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்யும் நபர்களும் அங்கே அனுமதிக்கப் படுவதில்லை.

ஆனால், இந்த விஐபி., அருவியான கரடி அருவியிலோ, இவை எல்லாம் உண்டு. வருபவர்கள் வரும்போதே ஆயில் மசாஜ் செய்து விடுவதற்கு ஆட்களையும் அழைத்துக் கொண்டு வந்துவிடுகின்றனர். இங்கே நீதிபதியின் உத்தரவு அப்பட்டமாக மீறப் படுகின்றது என்பதுடன், அருவியையும் நாசப் படுத்தி, வன விலங்குகளுக்கும் அபாயகரமான சூழலை ஏற்படுத்தி விடுகின்றனர்.

எனவே, இனியாவது இந்த அருவியை பாதுகாக்க வேண்டும் என்று சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

Entertainment News

Popular Categories