இறைவன் என்பவன் தண்டிப்பவன் அல்ல.அவன் கருணையின் சிகரம்.பொறாமை இல்லாதவன்.எங்கும் நிறைந்து இருப்பவன்.நீங்கள் ஒவ்வொரு நவகிரக கோவில்களிலும் பார்த்தால் சிவன் தான் மூலக் கருவறையில் இருந்து அருள் பாலிப்பார்.அந்தந்த தலம் , அந்த கிரகங்களுக்கு உரிய சீதோஷ்ணம் ,காரத்துவம் நிறைந்து காணப்படும்.

சிவ பெருமான் தான் இத்தலத்தின் நாயகனாக ஆட்சி புரிபவராக இருப்பார்.இங்கே நவக்கிரகங்கள் அதிகாரிகளாக இருப்பார்கள்.சில நேரங்களில் அதிகாரிகள் சரியில்லாமல் இருப்பார்.அதிகாரிகள் வன்மை காரணமாகத் தான் ஜோதிடர்கள் ஆட்சி புரிபவர்களை நேராகப் பொய் பார்க்கச் சொல்வார்கள்.ஆகவே ,இப்படி க்ஷேத்திரங்களுக்கு நீங்கள் போகும்போது வழியில் பல கோயில்களில் ஆட்சியாளர்களைச் சந்திக்கலாம் ; வழிபடாலாம்;கர்மத்தை போக்கலாம்.சந்தோசமாக வாழ்க்கையை மாற்றிக்கொள்ளலாம்.
ஆட்சியாளர்களுக்கு அதிகாரிகள் கட்டுப்பட்டவர்கள்.அதிகாரிகளுக்கு ஆட்சியாளர்களை விட அதிகாரம் இல்லை.ஆகவே நாம் தாராளமாக எல்லா கோவில்களுக்கும் சென்று வழிபடலாம்.நவகிரக கோவிலுக்கு சென்று திரும்பும் போது வழியில் பல கோவில்களுக்கு சென்று அருள் மழையில் நனையலாம். ஆகவே இறைவன் தண்டிப்பவன் அல்ல.

ALSO READ:  சதுரகிரி கோவிலுக்கு தாணிப்பாறை வழியாக மட்டும் செல்ல வேண்டும்: ஆட்சியர் உத்தரவு!

இறைவன் ஒருவன் தான் மிகப் பெரியவன் என்ற எண்ணத்தோடு எல்லா கோவில்களுக்கும் செல்வோம்

[wp_ad_camp_4]

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending