December 5, 2025, 9:05 PM
26.6 C
Chennai

கோயில் பணியாளர்களுக்கு 7-வது ஊதிய குழு சம்பளம்? அறிக்கை கேட்கிறார் ஆணையர்!

temples - 2025

தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுபாட்டின் கீழ் 44,120 கோயில்கள் உள்ளன. இந்தக் கோயில்களில் அர்ச்சகர், எழுத்தர், ஓதுவார் உள்ளிட்ட 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இவர்கள், அரசு ஊழியர்களுக்கு நிகராக ஊதியம் வழங்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதைத்தொடர்ந்து, 7-வது ஊதிய குழு அடிப்படையில் ஊதியம் வழங்குவது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டது.

ஆனால், அரசாணை அமல்படுத்தப்படாததால் கோயில் பணியாளர்கள் பழைய ஊதியத்தையே பெற்று வருவதாக கூறப்படுகிறது. இதனால், கோயில் பணியாளர்கள் பொருளாதார ரீதியாக கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில், திருக்கோயில் பணியாளர்களுக்கு 7-வது ஊதிய குழுவின் மூலம் பரிந்துரை செய்யப்பட்ட சம்பள விகிதங்களை நடைமுறைப்படுத்தப்பட்டதற்கான விவரங்கள் அடங்கிய அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் க.பணீந்திர ரெட்டி உத்தர விட்டுள்ளார்.

இதுதொடர்பாக, இந்து சமய அறநிலையத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: 7-வதுஊதிய குழுவின் மூலம் பரிந் துரை செய்யப்பட்ட சம்பள விகிதங்களை நடைமுறைப்படுத்த அரசாணை வெளியிடப்பட்டது.

இருப்பினும், ஒரு சில இடங்களில் நடைமுறைப்படுத்தவில்லை என்று தகவல்கள் வந்தன. எனவே, தமிழகம் முழுவதும் அரசாணை நடைமுறைபடுத்தப்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிய கோயில் பணியாளர்களுக்கு சம்பள வீதம் நடைமுறைப்படுத்தப்பட்டதற்கான விவரங்களை அறிக்கையாக சமர்பிக்கும்படி இணை ஆணையர்கள் மற்றும் உதவி ஆணையர்களுக்கு ஆணையர் க.பணீந்திர ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories